ஆப்நகரம்

ஒகேனக்கலில் படிப்படியாக குறையும் நீர்வரத்து; வெள்ளம் குறையாத காவிரி ஆறு!

காவிரியாற்றில் 1.10 லட்சம் கன அடியாக நீர்வரத்து குறைந்துள்ளது.

Samayam Tamil 13 Aug 2018, 8:57 am
ஒகேனக்கல்: காவிரியாற்றில் 1.10 லட்சம் கன அடியாக நீர்வரத்து குறைந்துள்ளது.
Samayam Tamil Hogenakkal


கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் கபினி, கே.ஆர்.எஸ், கிருஷ்ணராஜ சாகர் உள்ளிட்ட அணைகள் நிரம்பின. இதையடுத்து பாதுகாப்பு கருதி அணைகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் காவிரியில் 1.43 லட்சம் கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டது. இந்த நீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கலை அடைந்தது.

தமிழகத்திற்கு காவிரி நீர்வரத்து:

ஆகஸ்ட் 10, மாலை 5 மணி: 1 லட்சம் கன அடி

ஆகஸ்ட் 11, காலை 8 மணி: 1.25 லட்சம் கன அடி

ஆகஸ்ட் 11, மதியம் 2 மணி: 1.35 லட்சம் கன அடி

ஆகஸ்ட் 11, இரவு 8 மணி: 1.40 லட்சம் கன அடி

ஆகஸ்ட் 12, காலை 6 மணி: 1.27 லட்சம் கன அடி

ஆகஸ்ட் 13, காலை 6 மணி: 1.10 லட்சம் கன அடி

இதன்படி, 1.27 லட்சம் கன அடியில் இருந்து, 1.10 லட்சம் கன அடியாக தமிழக நீர்வரத்து குறைந்துள்ளது. இருப்பினும் தமிழகக் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. காவிரி பாயும் மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்ந்து அமலில் உள்ளது.

ஒகேனக்கலில் 35வது நாளாக தொடர்ந்து குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

Hogenakkal receives 1.10 lakh cubic feet water from Karnataka.

அடுத்த செய்தி