ஆப்நகரம்

தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 7 பேர் பலி

ஆயுதபூஜை விடுமுறைக்காக நெல்லை வந்த 7 பேர் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி பலியாகியுள்ளனர்.

TNN 11 Oct 2016, 5:56 pm
முக்கூடல்: ஆயுதபூஜை விடுமுறைக்காக நெல்லை வந்த 7 பேர் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி பலியாகியுள்ளனர்.
Samayam Tamil holiday fun turned into tragedy 7 youngsters drown in thamirabarani river
தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 7 பேர் பலி


ஹரக் கிருபாகரன் என்ற பொறியியல் கல்லூரி மாணவர் நேற்று ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு தன் நண்பர்கள் தமீம் அன்சாரி, சோபன்பாபு ஆகியோருன் தனது ஆலங்குளம் அம்பை சாலையில் உள்ள தன் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது நண்பர்கள் மூவரும் முக்கூடல் தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர். குளிக்கும்போது ஆற்றின் சுழலில் சிக்கிய அவர்கள் 3 பேரும் உயிரிழந்துள்ளனர். மூன்று பேரும் நெடு நேரம் ஆகியும் வீடு திரும்பாத நிலையில் தீயணைப்புத் துறைக்குப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நீண்ட போராட்டத்திற்குப் பின் 3 இளைஞர்களும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இதே போல, நேற்று முன்தினம் ஆயுதபூஜை விடுமுறையைக் கழிக்க சென்னையிலிருந்து நெல்லை வந்த ஐடி நிறுவன ஊழியர்கள் 4 பேர் தலையணை ஆற்றில் குளிக்கும் போது உயிரிழந்துள்ளனர்.

English Summary:

Holiday fun turned into tragedy: 7 youngsters drown in Thamirabarani river

Holiday, tragedy, youngsters, Thamirabarani, river, Vijayadashami, Durga Pooja, Durga Ashtami, விஜயதசமி, ஆயுதபூஜை

அடுத்த செய்தி