ஆப்நகரம்

ஆட்டோவில் தவறவிட்ட ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள ஐ போனை திருப்பிக் கொடுத்த டிரைவர்!

தனது ஆட்டோவில் தவறவிட்ட ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள ஐபோன் ஒன்றை தவறவிட்ட பெண்ணிடம் திருப்பிக் கொடுத்த ஆட்டோ டிரைவரை போலீஸ் கமிஷனர் வெகுவாக பாராட்டியுள்ளார்.

Samayam Tamil 1 Nov 2018, 11:03 pm
தனது ஆட்டோவில் தவறவிட்ட ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள ஐபோன் ஒன்றை தவறவிட்ட பெண்ணிடம் திருப்பிக் கொடுத்த ஆட்டோ டிரைவரை போலீஸ் கமிஷனர் வெகுவாக பாராட்டியுள்ளார்.
Samayam Tamil chennai


கடந்த செவ்வாய்கிழமை இரவு ஐஸ்வர்யா (26) என்ற இளம்பெண் ஒருவர் ஜமால் என்பவரது ஆட்டோவில் எக்பிரஸ் அவென்யூ மால் பகுதியில் ஏறியுள்ளார். அங்கிருந்து புறப்பட்டு, சென்ற ஆட்டோ டிரைவர் ஜமால், ஐஸ்வர்யாவை எத்திராஜ் சாலையில் இறக்கிவிட்டுள்ளார்.

இதையடுத்து, ஐஸ்வர்யா ஆட்டோவில் இருந்து இறங்கி சென்ற பிறகு ஆட்டோவின் பின் இருக்கையில், மொபைல் போன் இருப்பதை கண்டறிந்துள்ளார். அப்போது, போனில் சார்ஜ் வசதியும் இல்லை. இதனால், உடனடியாக போனுக்கு உரியவரை தொடர்பு கொள்ளமுடியவில்லை. மறுநாள், காலையில், நண்பர்களின் உதவியுடன் மொபைலை சார்ஜ் செய்த பின், மொபைலில் இருந்த மற்றொரு எண்ணின் மூலம் அப்பெண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அப்போது ஐஸ்வர்யாவை எக்ஸ்பிரஸ் அவென்யூவிற்கு வரவழைத்து மொபைல் போனை அவரிடம் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்த சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஆட்டோ டிரைவர் ஜமாலை சந்தித்து அவரை வெகுவாக பாராட்டியுள்ளார். தொடர்ந்து ஆட்டோ டிரைவரும் எழும்பூரில் உள்ள கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று அவரை சந்தித்து பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

அடுத்த செய்தி