ஆப்நகரம்

ஆவணக் கொலை விவகாரத்தில் அசால்டா பதிலளித்த தமிழக முதல்வர்- அதிர்ச்சியில் பொதுமக்கள்!

செய்தியாளர் சந்திப்பில் முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில், ஆணவக் கொலை குறித்து அதிர்ச்சிகர பதில் அளித்துள்ளார்.

Samayam Tamil 12 Jul 2019, 4:35 pm
திருநெல்வேலியில் நடைபெறும் அதிமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்து கொள்ள முதல்வர் பழனிசாமி புறப்பட்டுச் சென்றார். இதற்காக மதுரை விமான நிலையம் வந்த அவர், செய்தியாளர்களை சந்தித்தார்.
Samayam Tamil Palaniswami


அப்போது பேசிய அவர், ஆவணக் கொலைகள் மிகவும் மோசமான ஒன்று. இதைத் தடுக்க அதிமுக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அனைத்து ஆட்சிகளிலும் இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

நீட் தேர்வை தமிழகத்தில் அமல்படுத்தியது அதிமுக ஆட்சிதான்- ஸ்டாலின் தாக்குதல்!

மருத்துவக் கல்வி கற்பதற்கான நீட் தேர்வு ரத்து குறித்து மத்திய அரசிடம் பலமுறை பேசியுள்ளோம். இதற்கான அடித்தளம் எங்கள் ஆட்சியில் போடப்படவில்லை. கடந்த 2010ல் திமுக - காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் போடப்பட்டது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் 2019-ஆம் ஆண்டு விருதுகள் அறிவிப்பு!

எனவே மக்கள் உண்மை நிலையை புரிந்து கொள்ள வேண்டும். அதிமுக கொடுத்த வாக்கை எப்போதும் காப்பாற்றும். ஏற்கனவே போடப்பட்ட தேர்தல் ஒப்பந்தப்படி, மாநிலங்களவையில் ஒரு இடத்தை பாமகவிற்கு அளித்துள்ளோம்.

தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க அனுமதி- வைகோ கடும் எதிர்ப்பு!

மற்ற இரண்டு இடங்கள் தாழ்த்தப்பட்ட மற்றும் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கியுள்ளோம் என்று கூறினார்.

அடுத்த செய்தி