ஆப்நகரம்

சரவணபவன் ராஜகோபாலின் உயிரைப் பறித்த கொலை வழக்கு

ஜீவஜோதி கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட ஆயுள் கைதியான சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் உடல் நலக்குறைவால் இன்று காலை காலமானார்.

Samayam Tamil 18 Jul 2019, 11:35 am
சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை காலமானார்.
Samayam Tamil Raja Gopal


நாகை மா‌வ‌ட்ட‌ம் வேதார‌ண்ய‌த்தை சே‌ர்‌ந்‌தவ‌ர் ‌ஜீவஜோ‌தி. உணவக மேலாளரின் மகளான இவரது கணவ‌ர் பிரின்ஸ் சா‌ந்தகுமா‌ர். 2001-ம் ஆண்டு ஜீவஜோதியை மறுமணம் செய்யும் நோக்கத்தில் சா‌ந்தகுமாரை கொடைக்கானலுக்கு கடத்திச் சென்று ராஜகோபால் கொலை செ‌ய்ததாக குற்றம் சா‌ற்றப்பட்டது. இ‌ந்த வழ‌க்‌கை விசாரித்த சென்னை பூந்தமல்லி நீதிமன்றம், ராஜகோபாலுக்கு 10 ஆ‌ண்டு ‌கடுங்காவல் சிறை‌த் த‌ண்டனையு‌ம், 55 ல‌ட்ச‌ம் ரூபா‌ய் அபராதமு‌ம் ‌வி‌தி‌த்தது.

கொலைக்கு உடந்தையாக இருந்த டே‌னிய‌ல், கா‌‌ர்மேக‌ம், ஹூசை‌ன், கா‌சி ‌வி‌ஸ்வநாத‌ன், த‌மி‌ழ்செ‌ல்வ‌ன், முருகான‌ந்த‌ம், சேது, ப‌ட்டுர‌ங்க‌ம் ஆ‌கியோரு‌க்கு 7 முத‌ல் 9 ஆ‌ண்டுக‌ள் வரை த‌ண்டனை ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்டது. கட‌த்த‌ல் வழ‌க்‌கி‌ல் ராஜகோபாலு‌க்கு 3 ஆ‌ண்டு‌ம், ம‌ற்ற 8 பேரு‌க்கு இர‌ண்டு ஆ‌‌ண்டுக‌ளும் த‌‌ண்டனை ‌‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்டது.

இ‌ந்த இர‌ண்டு வழ‌க்‌குக‌‌ளிலு‌ம் ‌ வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் ராஜகோபால் உள்ளிட்டவர்கள் மேல்முறையீடு செய்தனர். அரசு சார்பில் தண்டனையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் இ‌ந்த வழ‌க்‌கி‌ல் 2009-ம் ஆண்டு ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்த செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ ‌‌ நீ‌திபதிகள் பி.கே. மிஸ்ரா, பானுமதிஆகியோ‌ர் அடங்கிய அ‌ம‌ர்வு, ‌கீ‌ழ் ‌நீ‌திம‌ன்ற‌ம் அ‌ளி‌த்த 10 ஆ‌ண்டு ‌சிறைத‌ண்டனையை ஆ‌யு‌ள் த‌ண்டனையாக அ‌திக‌ரிப்பதாக அறிவித்தது. உயர்நீதிமன்ற தீர்ப்பையும் கடந்து உச்சநீதிமன்றத்தில் ராஜகோபால் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது.

உச்சநீதிமன்றம் ராஜகோபால் மீதான தண்டனையை உறுதி செய்து ஜூலை 7ம் தேதி சரணடைய உத்தரவிட்டது. ஆனால், ராஜகோபால் சரணடையவில்லை. மாறாக, தனது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும், எழுந்து நடப்பதற்கே இரண்டுபேர் உதவி தேவைப்படுவதாகவும் தெரிவித்த ராஜகோபால் தரப்பு, நீதிமன்றத்தில் சரணடைவதில் இருந்து விலக்கு கோரப்பட்டது.

இதனால் கோபமடைந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், உங்களுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நிறைவடையும் நிலையில், இறுதி நாளில் தான் இதுபோன்று மனுத்தாக்கல் செய்வீர்களா என்று நீதிபதிகள் காட்டமாக கருத்து தெரிவித்தனர். மேலும், ஒரு நாள் கூட உங்களால் சிறையில் இருக்க முடியாதா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் ராஜகோபால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதனைத் தொடர்ந்த ராஜகோபால் கடந்த 9ம் தேதி சென்னை நீதிமன்றத்தில் ஆஜரானார். மருத்துவமனை அவசர ஊர்தியில் வந்து ஆஜரான ராஜகோபால் சிறைக்கு செல்லாமல் நேரடியாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ராஜகோபாலின் உடல்நிலை மிகவும்மோசமாக இருப்பதாகவும், தொடர்ந்து செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற அனுமதியை பெற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். செவ்வாய்க் கிழமை ராஜகோபால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று காலை சிகிச்சை பலன் அளிக்காமல் ராஜகோபால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி