ஆப்நகரம்

அரசு அலுவலகங்கள் நேரம் மாற்றம்: முதல்வர் போட்ட உத்தரவு!

மின் நுகர்வை குறைப்பதற்காக பஞ்சாப் மாநிலத்தில் அரசு அலுவலகங்கள் செயல்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 2 May 2023, 2:20 pm
கோடை வெயில் தொடங்கிய நிலையில் மின் நுகர்வு மிகவும் அதிகரித்துள்ளது. மின் பற்றாக்குறையை தவிர்க்க உற்பத்தியை அதிகரித்தல், வெளிச் சந்தையில் கொள்முதல் செய்தல் என அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Samayam Tamil govt staffs


பஞ்சாப் அரசு மின் நுகர்வை குறைக்கும் விதமாக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் அரசு அலுவலகங்களை காலை 7.30 மணிக்கே தொடங்க உத்தரவிட்டார். மின் நுகர்வு உச்சத்தில் இருக்கும் நண்பகல் நேரத்தில் அலுவலகப் பணிகளை முடிக்குமாறு உத்தரவிடப்பட்டது.

இதன் படி அனைத்து அரசு அலுவலகங்களும் காலை 7.30 மணிக்கு தொடங்கி 2 மணிக்கு மூட உத்தரவிடப்பட்டது. இந்த அறிவிப்பு இன்று முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை 7.30 மணிக்கே பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தனது அலுவலகம் வந்து கோப்புகளில் கையெழுத்திட்டார்.
மதிமுகவிலிருந்து நீக்கப்படுவாரா திருப்பூர் துரைசாமி? வைகோவுக்கு வந்த கடிதம்!
மே 2 முதல் ஜூலை 15 வரை இந்த பரிசோதனை முயற்சி தொடரும் என்றும், அவசியம் ஏற்பட்டால் இந்த நடைமுறை மேலும் நீட்டிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த திட்டம் மின் நுகர்வை குறைத்தால், பொது மக்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் நன்மை பயக்கும் வகையில் அமைந்தால் பிற மாநிலங்களிலும் முன்னெடுக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி