ஆப்நகரம்

ஈரோடு கிழக்கு: திமுக சூறாவளிப் பிரச்சாரம் - அமைச்சர்கள் ரவுண்ட் அப்!

ஈரோடு கிழக்கு தொகுதியில் ஒரு வாரத்துக்கும் மேலாக வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 28 Jan 2023, 11:16 am
ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அமைச்சர் முத்துசாமி தலைமையில் திமுக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் எட்டாவது நாளாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
Samayam Tamil dmk election campaign


ஈரோடு கிழக்கு சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் திருமகன் ஈவேராவின் மறைவை அடுத்து தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் பிப்ரவரி 27 இல் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திமுக, காங்கிரஸ், தேமுதிக உள்ளிட்ட கட்சியினர் தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

அதன்படி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதலே திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இன்று ஏழாவது நாளாக பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிமுகவுக்கு விட்டுக்கொடுத்தது ஏன்? ஜிகே வாசன் சொன்ன சூச்சுமம்!
ஏற்கனவே பெரியார் நகர், வீரப்பன்சத்திரம், மரப்பாலம், அசோகபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிரச்சாரத்தை மேற்கொண்டு வந்த நிலையில் நேற்று ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பெரிய தோட்டம், முத்துக்குமாரசுவாமி வீதி, கிராமடை டீசல் செட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திமுகவினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

இதில் தமிழக வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமி, பால்வளத்துறை அமைச்சர் நாசர், திமுகவின் துணை பொது செயலாளர் அந்தியூர் செல்வராஜ், காங்கிரஸ் சட்டமன்ற கொறடா உறுப்பினர் செல்வ பெருந்தகை, ஈவிகேஎஸ். இளங்கோவனின் மகன் சஞ்சய் சம்பத், மாநகராட்சி மேயர் நாகரத்தினம் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக நேரில் சென்று மக்களை சந்தித்து கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகின்றனர்.
உதயநிதியை வரவேற்க காத்திருந்த படை: நாமக்கல்லில் போக்குவரத்து நெரிசல்!
ஏற்கனவே திமுக தரப்பில் அமைச்சர்கள் உட்பட 32 தேர்தல் பணி குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று முதற்கட்டமாக பால்வளத்துறை அமைச்சர் நாசர் நேரில் வந்து தற்போது பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி