ஆப்நகரம்

குழந்தை சுதந்திரத்திற்கு தாய்பால் கொடுத்து காப்பாற்றிய இளம் தாய்மார்கள்!

சுதந்திர தினத்தின்று கழிவுநீர் கால்வாயில் வீசப்பட்ட குழந்தை சுதந்திரத்திற்கு, இளம் தாய்மார்கள் தாய்பால் கொடுத்து காப்பாற்றிய சம்பவம் அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.

Samayam Tamil 19 Sep 2018, 1:12 pm
சுதந்திர தினத்தின்று கழிவுநீர் கால்வாயில் வீசப்பட்ட குழந்தை சுதந்திரத்திற்கு, இளம் தாய்மார்கள் தாய்பால் கொடுத்து காப்பாற்றிய சம்பவம் அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.
Samayam Tamil Untitled-6-750x506


கடந்த ஆகஸ்டு 15ஆம்தேதி சுதந்திர தினத்தன்று சென்னை வளசரவாக்கத்தில் கழுவுநீர் கால்வாயில் பிறந்து இரண்டு மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று தொப்புள்கொடிகூடஅகற்றப்படாத கழிவுநீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்டது. கீதா என்பவர் இந்த குழந்தையை மீட்டு, அதற்கு சுதந்திரம் என பெயர் சூட்டி, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

குழந்தையின் உடல்நிலை மோசமாக இருந்ததால் உடனடியாக ஐசியூவிற்கு மாற்றப்பட்டது. குழந்தையின் ரத்தத்தில் அதீத நோய் தொற்று ஏற்பட்டிருந்தால் இரண்டு வாரங்கள் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு, தொடர்ந்து கண்கானிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் தாய்பால் கொடுக்கப்பட்டால்தான் குழந்தையின் எடை அதிகரிக்கும் என்பதால், மருத்துவமனையில் செயல்பட்டு வந்த தாய்பால் வங்கியில், பெயர் தெரியாத பல இளம் தாய்மார்கள் தாய்பாலை தானம் செய்து, குழந்தை சுதந்திரத்தை காப்பாற்றினர்.

தற்போது அந்த குழந்தையின் உடல்நிலை சீராகி, எடை அதிகரித்துள்ளது.இதுதொடர்பாக ராஜிவ் காந்தி குழந்தைகள் மருத்துவமனை இயக்குநர்டாக்டர் அரசர் கூறுகையில்’ தற்போது குழந்தையின் எடை 2.17 கிலோவாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து அவருக்கு தாய்பால் கொடுக்கப்பாட்டால் அவரது உடல்நிலை சீராகும். மேலும் தாய்பால் வங்கியில் இருந்து குழந்தைக்கு தேவையான தாய்பால் தினமும் வழங்கப்படும்’ ’என்று கூறினார்.

இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் குழந்தையை சமூக நலத்துறை அமைச்சர் சரோஜாவிடம் வழங்கினார். இந்த நிகழ்வின்போது, குழந்தைகள் மருத்துவமனையில் இருந்த அனைவரும் உற்சாகமாக கரகோஷங்களை எழுப்பினர். அப்போது பேசியசெவிலி ஒருவர் எங்களைபோல் இந்த குழந்தையை நன்றாக கவனித்துக்கொள்ளும் ஒருவரிடம்தான் குழந்தை செல்ல வேண்டும் என்றார்.

இதனைத்தொடர்ந்துகலைச்செல்வி காருண்யா தன்னார்வ தொண்டு நிறுவனத்திடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது. செவிலியர்கள் குழந்தையுடன் செல்பி எடுத்துக் கொண்டனர். கீதா கண்ணீர் மல்க குழந்தைக்கு முத்தம் கொடுத்தார்.

இந்த நிகழ்வின் போது பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் குழந்தையை பராமரிக்க மாதம்தோறும்தமிழக அரசு சார்பில் ரூ.2,165 வழப்படும் என்று கூறினார்.

அடுத்த செய்தி