ஆப்நகரம்

ஜூன் 30 வரை முழு ஊரடங்கா? என்ன செய்யப் போகிறது தமிழக அரசு?

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் பாதிப்பை கட்டுப்படுத்த ஊரடங்கு நீட்டிக்கபட உள்ளதாக கூறப்படுகிறது.

Samayam Tamil 18 May 2021, 10:53 am
தமிழகத்தில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கு மே 24ஆம் தேதி வரை அமலில் உள்ள நிலையில் அடுத்தகட்ட ஊரடங்கு குறித்த முக்கிய தகவல்கள் வெளிவந்துள்ளன.
Samayam Tamil how long will the full curfew be in force in tamil nadu what is the tamil nadu govt going to do
ஜூன் 30 வரை முழு ஊரடங்கா? என்ன செய்யப் போகிறது தமிழக அரசு?


தீவிரமடையும் வாகன தணிக்கை!

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வரும் நிலையிலும் பாதிப்பு குறைந்தபாடில்லை. தினசரி பாதிப்பு 33 ஆயிரத்தை கடந்து சென்றுள்ளது. நாள் ஒன்றுக்கு 300 பேருக்கு மேல் உயிரிழக்கின்றனர். அத்தியாவசியப் பொருள்கள் மட்டும் காலை 6 மணி முதல் 10 மணி வரை விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும் மக்கள் நடமாட்டம் குறையாத நிலையில் காவல்துறையினர் தேவையில்லாமல் சுற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

திருமணத்துக்கு அனுமதி மறுப்பு!

ஆரம்பத்தில் காவல் துறையினர் விட்டுப்பிடித்த நிலையில் மக்கள் பாதிப்பை உணராமல் ஆளுக்கொரு காரணங்களைச் சொல்லி அங்குமிங்கும் சென்று வந்தனர். இந்நிலையில் இ பதிவு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இ பாஸ் முறை போன்று விண்ணப்பித்து ஒப்புதலுக்காக காத்திருக்க தேவையில்லை எனினும் இ பதிவு முறையில் திருமணம், இறப்பு, முதிய பெற்றோர்களை பேணுதல் போன்ற 4 காரணங்களுக்கு மட்டும் அனுமதியளிக்கப்பட்டது.

காவல் எல்லையை கடக்க இ பதிவு!

சசிகலா வச்ச குறி இந்த தடவை தப்பாது: யாருக்காக ரீ என்ட்ரி கொடுக்கிறார் தெரியுமா?

இதில் திருமணம் என்ற காரணத்தைச் சொல்லி பலரும் தவறாக இ பதிவு முறையை பயன்படுத்துவதால் அந்த ஆப்ஷன் மட்டும் நேற்று நீக்கப்பட்டது. பலரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இன்று மீண்டும் சேர்க்கப்பட்டது. ஆனால் மறுபடியும் அந்த முறை நீக்கப்பட்டுள்ளது. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு இ பதிவு முறை அமல்படுத்தப்பட்ட நிலையில் இன்று காவல் எல்லையைக் கடந்து செல்ல இ பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.



ரேஷன் கடைகளில் கொரோனா இலவசமா?

கொரோனா பொது முடக்கத்தால் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் நிலையில் அதை சமாளிக்க மளிகைப் பொருள்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. அத்துடன் முதல் தவணையாக மே மாதத்துக்கு 2000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது. ஆனால் இதை வாங்குவதற்காக மக்கள் பல இடங்களில் தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் ஒன்று கூடுவது அச்சத்தை ஏற்படுத்துகிறது.

கடைகள் திறப்பு நேரம் நீட்டிக்கப்படுமா?

காலை 8 மணி முதல் 10 மணி வரை கடைகள் இயங்கி வரும் நிலையில் திறந்திருக்கும் நேரத்தை பகல் 12 மணி வரை நீட்டிக்க வர்த்தகர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. தமிழக அரசு இந்த கோரிக்கையை நிறைவேற்றுமா, மே 24க்குப் பிறகு ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து கோட்டை வட்டாரத்தில் விசாரித்தால் ஊரடங்கு தளர்வு இப்போதைக்கு இல்லை என்றே பலரும் கூறுகின்றனர்.

மேலும் 14 நாள்கள் ஊரடங்கா?

தமிழகத்தைப் பொறுத்தவரை கொரோனா பரவல் வேகம் ஊரடங்குக்குப் பின் சற்று குறைந்ததாக கூறப்பட்டாலும் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தபடியே வருகிறது. 14 நாள்கள் ஊரடங்கு என்பது நேர்மறையான பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விடாது. கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் தொடர்ந்து ஊரடங்கை நீட்டித்து வருகின்றன. இதனால் தமிழக அரசும் மேலும் இரு வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிக்கும் என்கிறார்கள்.

ஜூன் 30 வரை வேறு வழியில்லை!

திருப்பதி மலையில் புதையல்: அடேயப்பா ஒரு வருஷமா போட்ட திட்டம்!

அதற்கு முன்பாக இந்த வார இறுதிக்குள் மருத்துவ வல்லுநர்கள், அனைத்துக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை அடக்கிய ஆலோசனைக் குழு, மாவட்ட ஆட்சியர்கள் ஆகியோரோடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துவார். அதன்பின்னர் அடுத்தகட்ட ஊரடங்கு குறித்த அறிவிப்பு வெளியாகும். ஜூன் 30ஆம் தேதி வரை முழு ஊரடங்கு கடைப்பிடித்தால் மட்டுமே கொரோனாவின் இரண்டாவது அலையிலிருந்து மக்களை காப்பாற்ற முடியும் என்கிறார்கள் பெரும்பாலான மருத்துவர்கள். தமிழக அரசும் இந்த பாதையில்தான் பயணிக்கும் என கூறுகிறார்கள் கோட்டை வட்டாரத்தினர்.

அடுத்த செய்தி