ஆப்நகரம்

தமிழகத்தில் அதிகரிக்கும் உயிர் பலி; கோவை மீண்டும் டாப்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருவது கவலையளிக்கும் விஷயமாக உள்ளது

Samayam Tamil 1 Dec 2021, 10:23 pm
தமிழகத்தில் இன்று ஒரே நாளில், 718 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து தமிழக சுகாதாரத் துறை இன்று வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: “அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட இன்று புதிதாக, 718 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 439 பேர் ஆண்கள், 279 பேர் பெண்கள். இதன் மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27 லட்சத்து 27 ஆயிரத்து 635 ஆக அதிகரித்து உள்ளது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


தலைநகர் சென்னையில், இன்று ஒரே நாளில், 117 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில், 118 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் நேற்று 115 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று, 117 ஆக சற்று அதிகரித்து உள்ளது. கோவை மாவட்டத்தில், நேற்று 109 ஆக இருந்த பாதிப்பு, இன்று 118 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 11 பேர் உயிரிழந்து உள்ளனர். 4 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 7 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்து உள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 36 ஆயிரத்து 492 ஆக அதிகரித்து உள்ளது.
எண்ணெய் இறக்குமதி என ராணுவ வீரரிடம் ரூ 60 லட்சம் மோசடி செய்த வெளிநாட்டு இளைஞர்!sa
இன்று மட்டும் 751 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில், இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 82 ஆயிரத்து 943 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, மாநிலம் முழுவதும், 8 ஆயிரத்து 200 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.” இவ்வாறு மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அடுத்த செய்தி