ஆப்நகரம்

மதுபான கடைகளில் அத்துமீறல்: தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு!

கும்பகோணத்தில் புதிய மதுபானக்கடைக்கு அனுமதி அளிக்கக்கூடாது என உத்தரவிடக் கோரிய வழக்கில் அத்துமீறல்கள் நடைபெற்ற எத்தனை மதுபான கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று நீதிமன்றம் கேள்வி

Samayam Tamil 24 Nov 2020, 9:48 pm
மதுரை: தமிழ்நாட்டில் இதுவரை எத்தனை மதுபான கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த சுவாமிநாதன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், “கும்பகோணம் புதிய ரயில் நிலைய சாலையில் மசூதி, ஆலயம் மற்றும் பள்ளி உள்ளதால் அப்பகுதி மிகவும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக உள்ளது. இப்பகுதியில் தற்போது புதிய மதுபான கடை மற்றும் மதுபானக் கூடம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன” என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் மதுபான கடை அமைக்கும் இடத்தில் வாகனம் நிறுத்துவதற்கான வசதிகள் எதுவும் இல்லை. இதனால் இப்பகுதியில் மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. புதிய மதுபான கடையில் இருந்த 70 கிலோமீட்டர் தொலைவில் பள்ளி இருந்து வருகிறது. எனவே புதிய மதுபான கடை அமைப்பதற்கு அனுமதி அளிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் தனது மனுவில் அவர் கோரியிருந்தார்.

வெள்ளத்துக்குத் தயாராகும் மதுரை... ஏற்பாடுகள் என்னென்ன?

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு இந்த வழக்கில் தமிழக தலைமைச் செயலரை எதிர் மனுதாரராக சேர்த்து உத்தரவிட்டனர். அத்துடன், வழக்கு விசாரணையின் போது, தமிழ்நாட்டில் இதுவரை எத்தனை மதுபான கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் எத்தனை மதுபான கடைகளில் அத்துமீறல் நடைபெற்று வருகிறது. அத்துமீறல்கள் நடைபெற்ற எத்தனை மதுபான கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது குறித்து தமிழக தலைமைச் செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை டிசம்பர் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

அடுத்த செய்தி