தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர், சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது.
கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று, கொரோனா தடுப்புப் பணிகளுக்கு தமிழக அரசு இதுவரை செய்துள்ள செலவுகள் குறித்து துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கூறியது:
கொரோனா தடுப்பு, சிகிச்சை மற்றும் நிவாரணப் பணிகளுக்காக தமிழக அரசு இதுவரை மொத்தம் ரூ.7,167.97 கோடி செலவிடப்பட்டுள்ளது. இவற்றில் மருத்துவ உபகரணம் மற்றும் மருந்துகள் வாங்க 830.60 கோடி ரூபாயும், மருத்துவக் கட்டமைப்புப் பணிகளுக்காக147 கோடி ரூபாயும் செலவிடப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.
13 மாணவர்கள் தற்கொலைக்கு திமுகதான் காரணம் - பேரவையில் கொந்தளித்த முதல்வர்!!
அத்துடன், கொரோனா தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு 262 கோடி ரூபாய், கூடுதல் பணியாளர்களின் ஊதியம், உணவுக்கு 243 கோடி ரூபாய் மற்றும் வெளிமாநில தொழிலாளர்களுக்காக 143 கோடி ரூபாயும் செலவு செய்யப்பட்டுள்ளதாக அமைசசர் கூறினார்.
முக்கியமாக, ரேஷன் அட்டைதாரர்களுக்கு நிவாரணத் தொகை மற்றும் இலவச பொருள்கள் வழங்க 4,896 கோடி ரூபாயும், கொரோனா தடுப்பு சிகிச்சைக்காக 639 கோடி ரூபாயும் செலவிடப்பட்டுள்ளது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று, கொரோனா தடுப்புப் பணிகளுக்கு தமிழக அரசு இதுவரை செய்துள்ள செலவுகள் குறித்து துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கூறியது:
கொரோனா தடுப்பு, சிகிச்சை மற்றும் நிவாரணப் பணிகளுக்காக தமிழக அரசு இதுவரை மொத்தம் ரூ.7,167.97 கோடி செலவிடப்பட்டுள்ளது. இவற்றில் மருத்துவ உபகரணம் மற்றும் மருந்துகள் வாங்க 830.60 கோடி ரூபாயும், மருத்துவக் கட்டமைப்புப் பணிகளுக்காக147 கோடி ரூபாயும் செலவிடப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.
13 மாணவர்கள் தற்கொலைக்கு திமுகதான் காரணம் - பேரவையில் கொந்தளித்த முதல்வர்!!
அத்துடன், கொரோனா தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு 262 கோடி ரூபாய், கூடுதல் பணியாளர்களின் ஊதியம், உணவுக்கு 243 கோடி ரூபாய் மற்றும் வெளிமாநில தொழிலாளர்களுக்காக 143 கோடி ரூபாயும் செலவு செய்யப்பட்டுள்ளதாக அமைசசர் கூறினார்.
முக்கியமாக, ரேஷன் அட்டைதாரர்களுக்கு நிவாரணத் தொகை மற்றும் இலவச பொருள்கள் வழங்க 4,896 கோடி ரூபாயும், கொரோனா தடுப்பு சிகிச்சைக்காக 639 கோடி ரூபாயும் செலவிடப்பட்டுள்ளது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.