ஆப்நகரம்

அடுத்த இரண்டு நாள் மழை எப்படி இருக்கும்? வெதர்மேன் கணிப்பு!

CHENNAI RAINS சென்னை மற்றும் சில மாவட்டங்களில் இரு நாள்கள் கனமழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.

Samayam Tamil 17 Nov 2021, 4:31 pm
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த இரு வாரங்களாக சென்னை உள்ளிட்ட பல மாவட்ட மக்கள் மழை வெள்ளத்தால் அவதிப்பட்டு வருகின்றனர்.
Samayam Tamil chennai weather


இந்நிலையில் தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து நாளை தெற்கு ஆந்திரா - வட தமிழக கடற்கரை நோக்கி நகரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும், எப்போது கனமழை இருக்கும் என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது சமூகவலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.
பொங்கல் பரிசு: தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு - ஆனாலும் ஒரு ஷாக்!
“இந்த மாதத்தின் மூன்றாவது சம்பவம் நாளை நிகழ உள்ளது. நவம்பர் 7ஆம் தேதியும், 11ஆம் தேதியும் மிக கனமழை பெய்தது போல் நவம்பர் 18ஆம் தேதியும் மிக கனமழை இருக்கும். தற்போது சென்னையில் பெய்யும் மழை என்பது டிரெய்லர் மட்டும் தான். காற்றழுத்த தாழ்வு பகுதியின் வெளி வட்டம் தான் தற்போது தமிழக கடற்கரைப் பகுதியை தொட்டுள்ளது. இன்று இரவு முதல் நாளை மாலை அல்லது இரவு வரை வட தமிழகத்தில் கனமழை பெய்யும்” என்று தெரிவித்துள்ளார்.
ஸ்டாலினுக்கு இந்த நான்கும் சிக்கல்: என்ன செய்வார் செந்தில் பாலாஜி?
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராணிபேட்டை, கடலூர், புதுச்சேரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் மழை அதிக அளவில் எதிர்பார்க்கலாம்.

இந்த முறை இரவில் மட்டுமல்லாமல் பகல் நேரங்களிலும் கனமழை இருக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி