ஆப்நகரம்

விமானங்களில் மின்னணு சாதனங்களுக்கு தடை - இந்தியர்களுக்கு பாதிப்பா?

அமெரிக்கா மற்றும் பிரிட்டன் விமானங்கள் மின்னணு சாதனங்களுக்கு தடைவிதித்துள்ளது.

TOI Contributor 23 Mar 2017, 5:08 pm
ஒரு ஸ்மார்ட் போனை விட பெரிய அளவிலான மின்னணு சாதனங்களை குறிப்பிட்ட நாடுகளில் இருந்து அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாட்டு விமனங்களில் கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவிலிருந்து அமெரிக்கா செல்லும் பயணிகள் செல்போனைத் தவிர எந்த மின்சாதனப் பொருட்களையும் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil how the us and uk ban on devices in planes will impact indians
விமானங்களில் மின்னணு சாதனங்களுக்கு தடை - இந்தியர்களுக்கு பாதிப்பா?


ஜோர்டான், எகிப்து, துருக்கி, சவுதி அரேபியா, ஆகிய நாடுகளில் இருந்து எந்தவொரு மின்னணு பொருட்களை கொண்டு வரக்கூடாது என அமெரிக்கா மற்றும் பிரிட்டன் தெரிவித்துள்ளது. மேலும், குவைத், மொராக்கோ, கத்தார், அபுதாபி மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு கூடுதலாக அமெரிக்கா தடை விதித்துள்ளது.

ஸ்மார்ட் போனைவிட பெரிய அளவிலான சாதனங்களுக்கு அனுமதி இல்லை என அமெரிக்காவும், 16 சென்டிமீட்டர் நீளம், 9.3 சென்டிமீட்டர் அகலம் கொண்ட மின்சாதனங்களுக்கு அனுமதி இல்லை என பிரிட்டனும் கூறியுள்ளன. இதில், குறிப்பாக, லேப்டாப், டிவிடி பிளேயர், இ-ரீடர், கணினி விளையாட்டு பொருட்கள், ஐபோன்7 மொபைல் ஆகியவை அடங்கும் என்பது குறிப்பிடதக்கது.

அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தின் தடையால், துருக்கி வழியாக அமெரிக்கா செல்பவர்களைத் தவிர ஏர்இந்தியா விமனா பயணிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பது தெளிவாகியுள்ளது. ஆனால், இந்தியாவிலிருந்து அமெரிக்கா செல்லும் பெரும்பாலான விமானங்கள் தோஹா, அபுதாபி, துபாய், இஸ்தான்புல் ஆகிய நகரங்களை இணைக்கும் விதமாக சென்று வருகின்றன. இதனால், பெருமளவில் இந்தியர்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா-வின் தடையால், எமிரேட்ஸ், எத்திஹாட் ஏர்லைன்ஸ், கத்தார் ஏர்வேஸ், பிரிட்டிஸ் ஏர்வேஸ், துருக்கி ஏர்லைன்ஸ், குவைத் ஏர்வேஸ், சவுதியா, எகிப்து ஏர்வேஸ் மற்றும் ராயல் ஜோர்டியன் ஏர்லைன்ஸ் ஆகிய நாட்டு விமானங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி