கல்வி, பொருளாதாரம், தொழில் வளர்ச்சி, உட் கட்டமைப்பு, வேலைவாய்ப்பு, தனி நபர் வருமானம் என பல்வேறு வகைகளில் இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்தின் வளர்ச்சியையும் தனித்தனியே பட்டியலிட்டு பார்க்கலாம். அவற்றில் மிகப் பெரும்பாலானவற்றில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்குகிறது.
இந்தியா சுதந்திரமடைந்த போது கல்வி, வேலைவாய்ப்பு, தனிநபர் வருமானம் ஆகியவற்றில் இந்தி பேசும் பல மாநிலங்களைவிட தமிழ்நாடு மிக மோசமான இடத்தையே பெற்றிருந்தது. ஆனால் சில பத்தாண்டுகளில் தமிழ்நாடு இதில் முதலிடம் வகித்தது என்றால் அதற்கு என்ன காரணம்?
மத்தியில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மற்ற மாநிலங்களைவிட மாநில சுயாட்சியை அதிகம் பேசும் தமிழ்நாட்டை
சற்று தள்ளிவைத்துப் பார்ப்பது வாடிக்கையாகிவிட்டது என்ற குரல் எப்போதும் ஒலிக்கிறது. அப்படியிருக்க இந்த வளர்ச்சி சாத்தியமானது எப்படி?
இந்த கேள்விகளுக்கான பதில் மிக எளிதானது. தமிழகம் எப்போதும் கல்விக்கு முன்னுரிமை கொடுத்ததன் பயனை இப்போது அனுபவித்து வருகிறது.
மதிய உணவு திட்டம், இட ஒதுக்கீடு, இலவச கல்வி, இலவச சீருடை, இலவச பேருந்து பயணம், திரும்பும் பக்கமெல்லாம் பள்ளிகள், கல்லூரிகள் என தமிழகம் முன்னெடுத்த திட்டங்களை கணக்கிட்டு பார்த்தால் இந்த வளர்ச்சியின் சூச்சுமம் புரியும்.
இந்த வளர்ச்சியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதற்காக தமிழக அரசு முன்னெடுத்துள்ள திட்டம் தான் புதுமைப் பெண் திட்டம்.
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் தற்போது காலத்துக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டு அதிக பயனாளர்களைப் பெற்றுள்ளது. இந்த திட்டத்தின் படி அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 வரை படிக்கும் மாணவிகள் அனைவரும் கல்லூரி படிக்கும் காலங்களில் மாதம் 1000 ரூபாய் அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. எந்த துறையை தேர்வு செய்திருந்தாலும், எத்தனை ஆண்டுகள் படித்தாலும் படிக்கும் காலம் முழுக்க அரசு மாதம் ஆயிரம் ரூபாய் மாணவிகளுக்கு வழங்குகிறது. தமிழக அரசின் பிற திட்டங்களில் உதவித் தொகை பெற்றிருந்தாலும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.
2022-23 பட்ஜெட் கூட்டத் தொடரில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இந்த திட்டம் பற்றி கூறிய நிலையில் செப்டம்பர் 5ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டார். தமிழகத்தில் எவ்வாறு வளர்ச்சி சாத்தியமாகிறது என்பதை நேரடி சாட்சியாக இருந்து பார்த்தார்.
ஏற்கனவே, மருத்துவப் படிப்பில் தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் போன்ற ஏனைய தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு 7.5 சதவீதம் ஒதுக்கீடு வழங்கும் சட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசால் கொண்டு வரப்பட்டது. அப்படி, சேரும் மாணவர்களுடைய கல்விக்காக ஆகக்கூடிய செலவு கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம், ஏன் கலந்தாய்வுக் கட்டணம் உள்ளிட்ட அனைத்தையும் அரசு ஏற்றுக்கொள்ளும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
அந்த வரிசையில், உயர் கல்வியில் சேரும் அனைத்து அரசுப் பள்ளி மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்ற அறிவிப்பு உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதத்தை மேலும் அதிகரிக்கும் என்பதுடன், பெண் கல்வியை ஊக்குவிக்கும், அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கையையும் அதிகரிக்கும்.
இந்த திட்டம் அமலுக்கு வந்த பின்னர் கல்விச் செலவுக்காக வீட்டை எதிர்பார்த்திருக்க வேண்டியதில்லை என மாணவிகள் கூறுகின்றனர். மாணவிகளுக்கு உயர் கல்வி கிடைப்பதில் அரசு காட்டும் அக்கறை பெற்றோர்களின் சுமையை குறைத்துவிட்டது. இதனால் உயர்கல்வியை நோக்கி வருபவர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரிக்கும் என கல்வியலாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
“தமிழ்நாட்டினுடைய முதலமைச்சராக மட்டுமல்ல, உங்கள் தந்தையின் இடத்தில் இருந்து நான் கேட்டுக் கொள்கிறேன். உங்களை வளர்த்தெடுக்கத்தான் நாங்கள் இருக்கிறோம். இந்த அரசும் இருக்கிறது. புதுமைப் பெண் போன்ற ஏராளமான திட்டங்களைக் கொண்டு வருவோம்” என்று முதல்வர் ஸ்டாலின் இத்திட்ட தொடக்க விழாவில் கூறினார்.
இந்தியாவுக்கான புதிய கல்விக் கொள்கை 2020-யை வடிவமைத்துள்ள ஒன்றிய அரசு நாடு முழுவதும் உயர் கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதத்தை 50 சதவீதமாக வருகிற 2035ஆம் ஆண்டுக்குள் உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது.
உயர் கல்வியில் மொத்த சேர்க்கை விகிதம் (Gross Enrolment Ratio - GER) என்பது பள்ளிக் கல்வியில் இருந்து கல்லூரி படிப்பான உயர் கல்விக்குச் செல்லும் 18 முதல் 23 வயதுக்கு உட்பட்டவர்களை கணக்கிடப்படுகிறது. அதன்படி, 2018-19 ஆம் ஆண்டிற்கான ஒட்டுமொத்த இந்தியாவுக்கான ஜி.இ.ஆர். விகிதம் 26.3 சதவீதமாக உள்ளது. 2014-15 ஆம் ஆண்டில் 24.3 சதவீதமாக இருந்த ஜி.இ.ஆர். விகிதத்தை 2035ஆம் ஆண்டுக்குள் 50 சதவீதமாக உயர்த்த தற்போது புதிய கல்விக் கொள்கை 2020இல் ஒன்றிய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
அதாவது 100 பேரில் 26 பேர் மட்டுமே பள்ளி படிப்பிலிருந்து கல்லூரி படிப்புக்கு போகும் நிலையில், அதனை 50 மாணவர்களாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், உயர்கல்வி குறித்த அகில இந்திய கணக்கெடுப்பு 2018-19 ஆம் ஆண்டின் அறிக்கையின்படி, தமிழ்நாட்டின் ஜி.இ.ஆர். விகிதம் 49 சதவீதமாக இருந்தது.
தமிழ்நாட்டில் உயர்கல்வி பயில்வோரின் எண்ணிக்கை 51.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதில் ஆண்கள் சதவீதம் 51.8, பெண்கள் சதவீதம் 51.0ஆக உள்ளது. புதிய கல்விக் கொள்கையில் 2035ஆம் ஆண்டுக்குள் உயர்கல்வி பயில்வோரின் எண்ணிக்கையை 50 சதவீதமாக ஆக உயர்த்த வேண்டும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், தமிழ்நாடு தற்போதே அதனை கடந்து முன்னோடியாக திகழ்கிறது.
புதுமைப் பெண் திட்டம் அமல்படுத்தப்பட்டுவிட்ட நிலையில் வரும் ஆண்டுகளில் அது அளப்பரிய மாற்றத்தை கொண்டு வரும். உயர்கல்வி சதவீதத்தை 100 ஆக மாற்றுவது எப்படி என ஒன்றிய அரசும், பிற மாநில அரசுகளும் முதல்வர் ஸ்டாலினிடம் பாடம் படிக்க வரும் காலம் தூரத்தில் இல்லை என்று உறுதியாக கூறலாம்.
இந்தியா சுதந்திரமடைந்த போது கல்வி, வேலைவாய்ப்பு, தனிநபர் வருமானம் ஆகியவற்றில் இந்தி பேசும் பல மாநிலங்களைவிட தமிழ்நாடு மிக மோசமான இடத்தையே பெற்றிருந்தது. ஆனால் சில பத்தாண்டுகளில் தமிழ்நாடு இதில் முதலிடம் வகித்தது என்றால் அதற்கு என்ன காரணம்?
மத்தியில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மற்ற மாநிலங்களைவிட மாநில சுயாட்சியை அதிகம் பேசும் தமிழ்நாட்டை
சற்று தள்ளிவைத்துப் பார்ப்பது வாடிக்கையாகிவிட்டது என்ற குரல் எப்போதும் ஒலிக்கிறது. அப்படியிருக்க இந்த வளர்ச்சி சாத்தியமானது எப்படி?
இந்த கேள்விகளுக்கான பதில் மிக எளிதானது. தமிழகம் எப்போதும் கல்விக்கு முன்னுரிமை கொடுத்ததன் பயனை இப்போது அனுபவித்து வருகிறது.
மதிய உணவு திட்டம், இட ஒதுக்கீடு, இலவச கல்வி, இலவச சீருடை, இலவச பேருந்து பயணம், திரும்பும் பக்கமெல்லாம் பள்ளிகள், கல்லூரிகள் என தமிழகம் முன்னெடுத்த திட்டங்களை கணக்கிட்டு பார்த்தால் இந்த வளர்ச்சியின் சூச்சுமம் புரியும்.
இந்த வளர்ச்சியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதற்காக தமிழக அரசு முன்னெடுத்துள்ள திட்டம் தான் புதுமைப் பெண் திட்டம்.
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் தற்போது காலத்துக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டு அதிக பயனாளர்களைப் பெற்றுள்ளது. இந்த திட்டத்தின் படி அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 வரை படிக்கும் மாணவிகள் அனைவரும் கல்லூரி படிக்கும் காலங்களில் மாதம் 1000 ரூபாய் அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. எந்த துறையை தேர்வு செய்திருந்தாலும், எத்தனை ஆண்டுகள் படித்தாலும் படிக்கும் காலம் முழுக்க அரசு மாதம் ஆயிரம் ரூபாய் மாணவிகளுக்கு வழங்குகிறது. தமிழக அரசின் பிற திட்டங்களில் உதவித் தொகை பெற்றிருந்தாலும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.
2022-23 பட்ஜெட் கூட்டத் தொடரில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இந்த திட்டம் பற்றி கூறிய நிலையில் செப்டம்பர் 5ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டார். தமிழகத்தில் எவ்வாறு வளர்ச்சி சாத்தியமாகிறது என்பதை நேரடி சாட்சியாக இருந்து பார்த்தார்.
ஏற்கனவே, மருத்துவப் படிப்பில் தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் போன்ற ஏனைய தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு 7.5 சதவீதம் ஒதுக்கீடு வழங்கும் சட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசால் கொண்டு வரப்பட்டது. அப்படி, சேரும் மாணவர்களுடைய கல்விக்காக ஆகக்கூடிய செலவு கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம், ஏன் கலந்தாய்வுக் கட்டணம் உள்ளிட்ட அனைத்தையும் அரசு ஏற்றுக்கொள்ளும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
அந்த வரிசையில், உயர் கல்வியில் சேரும் அனைத்து அரசுப் பள்ளி மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்ற அறிவிப்பு உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதத்தை மேலும் அதிகரிக்கும் என்பதுடன், பெண் கல்வியை ஊக்குவிக்கும், அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கையையும் அதிகரிக்கும்.
இந்த திட்டம் அமலுக்கு வந்த பின்னர் கல்விச் செலவுக்காக வீட்டை எதிர்பார்த்திருக்க வேண்டியதில்லை என மாணவிகள் கூறுகின்றனர். மாணவிகளுக்கு உயர் கல்வி கிடைப்பதில் அரசு காட்டும் அக்கறை பெற்றோர்களின் சுமையை குறைத்துவிட்டது. இதனால் உயர்கல்வியை நோக்கி வருபவர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரிக்கும் என கல்வியலாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
“தமிழ்நாட்டினுடைய முதலமைச்சராக மட்டுமல்ல, உங்கள் தந்தையின் இடத்தில் இருந்து நான் கேட்டுக் கொள்கிறேன். உங்களை வளர்த்தெடுக்கத்தான் நாங்கள் இருக்கிறோம். இந்த அரசும் இருக்கிறது. புதுமைப் பெண் போன்ற ஏராளமான திட்டங்களைக் கொண்டு வருவோம்” என்று முதல்வர் ஸ்டாலின் இத்திட்ட தொடக்க விழாவில் கூறினார்.
இந்தியாவுக்கான புதிய கல்விக் கொள்கை 2020-யை வடிவமைத்துள்ள ஒன்றிய அரசு நாடு முழுவதும் உயர் கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதத்தை 50 சதவீதமாக வருகிற 2035ஆம் ஆண்டுக்குள் உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது.
உயர் கல்வியில் மொத்த சேர்க்கை விகிதம் (Gross Enrolment Ratio - GER) என்பது பள்ளிக் கல்வியில் இருந்து கல்லூரி படிப்பான உயர் கல்விக்குச் செல்லும் 18 முதல் 23 வயதுக்கு உட்பட்டவர்களை கணக்கிடப்படுகிறது. அதன்படி, 2018-19 ஆம் ஆண்டிற்கான ஒட்டுமொத்த இந்தியாவுக்கான ஜி.இ.ஆர். விகிதம் 26.3 சதவீதமாக உள்ளது. 2014-15 ஆம் ஆண்டில் 24.3 சதவீதமாக இருந்த ஜி.இ.ஆர். விகிதத்தை 2035ஆம் ஆண்டுக்குள் 50 சதவீதமாக உயர்த்த தற்போது புதிய கல்விக் கொள்கை 2020இல் ஒன்றிய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
அதாவது 100 பேரில் 26 பேர் மட்டுமே பள்ளி படிப்பிலிருந்து கல்லூரி படிப்புக்கு போகும் நிலையில், அதனை 50 மாணவர்களாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், உயர்கல்வி குறித்த அகில இந்திய கணக்கெடுப்பு 2018-19 ஆம் ஆண்டின் அறிக்கையின்படி, தமிழ்நாட்டின் ஜி.இ.ஆர். விகிதம் 49 சதவீதமாக இருந்தது.
தமிழ்நாட்டில் உயர்கல்வி பயில்வோரின் எண்ணிக்கை 51.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதில் ஆண்கள் சதவீதம் 51.8, பெண்கள் சதவீதம் 51.0ஆக உள்ளது. புதிய கல்விக் கொள்கையில் 2035ஆம் ஆண்டுக்குள் உயர்கல்வி பயில்வோரின் எண்ணிக்கையை 50 சதவீதமாக ஆக உயர்த்த வேண்டும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், தமிழ்நாடு தற்போதே அதனை கடந்து முன்னோடியாக திகழ்கிறது.
புதுமைப் பெண் திட்டம் அமல்படுத்தப்பட்டுவிட்ட நிலையில் வரும் ஆண்டுகளில் அது அளப்பரிய மாற்றத்தை கொண்டு வரும். உயர்கல்வி சதவீதத்தை 100 ஆக மாற்றுவது எப்படி என ஒன்றிய அரசும், பிற மாநில அரசுகளும் முதல்வர் ஸ்டாலினிடம் பாடம் படிக்க வரும் காலம் தூரத்தில் இல்லை என்று உறுதியாக கூறலாம்.