ஆப்நகரம்

பொங்கல் பரிசு தொகை எப்படி வழங்கப்படும்? முக்கியத் தகவல்!

பொங்கல் பரிச்த் தொகையான 2500 ரூபாய் எப்படி வழங்கப்பட உள்ளது, அதை பெறுவதற்கான வழிமுறை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 23 Dec 2020, 8:46 am
பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவது ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் நிகழ்வு தான் என்றாலும் இந்த முறை சிறப்பு கவனம் பெறுகிறது.
Samayam Tamil tn pongal gift cash


பொங்கலுக்கு தேவையான பொருள்களுடன் வழக்கமாக 1000 ரூபாய் வழங்கப்பட்டு வந்த நிலையில் இந்த முறை 2500 ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பு தான் அந்த சிறப்பு கவனத்துக்கான காரணம். இந்தத் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

பொங்கல் பரிசுத் தொகை மற்றும் சிறப்பு தொகுப்பை வழங்குவதற்கான டோக்கனை டிசம்பர் 26ஆம் தேதி முதல் 30ஆம் தேதிக்குள் அவரவர் வீடுகளுக்கே நேரில் சென்று வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்பு ஜனவரி 4ஆம் தேதி தொடங்கி 13ஆம் தேதிக்குள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பள்ளிகள் திறப்பு எப்போது? உருவான புதிய சிக்கல்!
இந்நிலையில் 2500 ரூபாயை வழங்குவதற்காக , ரிசர்வ் வங்கியிடமிருந்து, மாநில தலைமை கூட்டுறவு வங்கி, புதிய 500 ரூபாய் நோட்டுக்களை வாங்க உள்ளது. இந்தத் திட்டத்துக்காக தமிழக அரசு ரூ.5 ஆயிரத்து 604.84 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

கடந்த இரு ஆண்டுகளாக பொங்கல் பரிசாக தலா 1,000 ரூபாயும், பொது முடக்க கால நிவாரணமாக, ஏப்ரல் மாதம் தலா, 1,000 ரூபாயும் வழங்கப்பட்டது. அப்போதும் மாநில தலைமை கூட்டுறவு வங்கி ரிசர்வ் வங்கியிடமிருந்து புதிய 500 ரூபாய் நோட்டுக்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த முறை பொங்கல் பரிசாக 2500 ரூபாயை புதிய ஐந்து ஐநூறு ரூபாய் நோட்டுகளாக வழங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ரஜினி கட்சியின் சி.எம். வேட்பாளர், தலைவர், பொதுச் செயலாளர் யார்? வெளியான முக்கியத் தகவல்!
ரொக்க பணத்தை உறையில் வைத்து வழங்கக்கூடாது. ரொக்கப் பணம் வழங்கப்பட்டதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி