ஆப்நகரம்

மனிதக்கழிவுகளை அள்ளும் மனிதர்கள்; செங்கல்பட்டில் தொடரும் அவலம்!

செங்கல்பட்டில் மனிதக்கழிவுகளை அங்குள்ள துப்புரவு தொழிலாளர்கள் வெறும் கையால் அள்ளும் அவலம் நிகழ்ந்து வருகிறது.

Samayam Tamil 26 Mar 2018, 6:49 pm
செங்கல்பட்டில் மனிதக்கழிவுகளை அங்குள்ள துப்புரவு தொழிலாளர்கள் வெறும் கையால் அள்ளும் அவலம் நிகழ்ந்து வருகிறது.
Samayam Tamil human waste


காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு பேருந்து நிலையத்தில் உள்ள நகராட்சி நவீன கட்டண கழிப்பிடத்தின் கழிவு நீர் தொட்டி நேற்று மாலை நிரம்பி வெளியேறியது. இதனால், கழிவு நீருடன் மனிதக்கழிவும் வெளியேறியதால், அப்பகுதியில் பெரும் நாற்றம் வீசியது.

இதையடுத்து, அந்த பேருந்து நிலையத்தில், தினக்கூலிகளாக வேலை பார்க்கும் துப்புரவு தொழிலாளர்களை, கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யுமாறு அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனால், அதற்கு தகுந்த உபகரணங்களை வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால், விரக்தியடைந்த துப்புரவு தொழிலாளர்கள், வெறும் கைகளாலேயே மனிதக்கழிவை அப்புறப்படுத்தினர்.

மேலும், கடந்த ஆறு மாதங்களாக கட்டண கழிப்பறைக்கு டெண்டர் விடப்படவில்லை என்றும், தனக்கு தேவையான ஆட்களை வைத்தே நகராட்சி ஆணையர் கழிப்பறையை நடத்தி வருவதாகவும் புகார்கள் எழுந்துள்ளது.

அடுத்த செய்தி