ஆப்நகரம்

ஓ.பி.எஸ் வீட்டின் முன்னால் கூடியுள்ள நூற்றுக்கணக்கான அதிமுகவினர்..!

சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் இன்று பேட்டி அளித்துள்ளதை தொடர்ந்து,அவரது இல்லம் முன்பாக நூற்றுக்கணக்கான அதிமுகவினர் கூடி தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

TNN 8 Feb 2017, 12:26 am
சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் இன்று பேட்டி அளித்துள்ளதை தொடர்ந்து,அவரது இல்லம் முன்பாக நூற்றுக்கணக்கான அதிமுகவினர் கூடி தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
Samayam Tamil hundreds of ops supporters gathered around cms house
ஓ.பி.எஸ் வீட்டின் முன்னால் கூடியுள்ள நூற்றுக்கணக்கான அதிமுகவினர்..!

இன்று இரவு மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார்.முதல்வர் பதவியை ராஜினாமா செய்யச் சொல்லி தன்னை சசிகலா வற்புறுத்தியதாகவும்,தான் சிறப்பாக செயல்படுவது சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை எனவும் ஓ.பன்னீர் செல்வம் வெளிப்படையாக தெரிவித்தார்.ஓ.பன்னீர் செல்வத்தின் இந்த பேச்சு,தமிழக அரசியலில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்களை சந்தித்த பின்னர்,தனது அரசு இல்லத்திற்கு ஓ.பன்னீர் செல்வம் திரும்பினார்.அவரை சசிகலா அதிருப்தியாளர்களான முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி,சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் உள்ளிட்ட பல முக்கிய அதிமுக நிர்வாகிகள் சந்தித்து வருகின்றனர்.ஏற்கனவே சசிகலா தமிழக முதல்வராக பதவியேற்க உள்ளதை அறிந்து கொந்தளிப்பில் இருந்த அதிமுக தொண்டர்கள்,பன்னீர் செல்வத்தின் இன்றைய அதிரடி பேச்சை கேட்டு மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதத்தில் நூற்றுக்கணக்கான அதிமுக தொண்டர்கள்,ஓ.பன்னீர் செல்வத்தின் வீட்டின் முன்னர் கூடியுள்ளனர்.சமுதாயத்தின் கீழ் மட்டத்திலிருந்து முதல்வராக உயர்ந்தவர் ஓ.பி.எஸ் எனவும்,மக்களுடன் அதிக தொடர்பில் உள்ள அவரைத்தான் நாங்கள் முதல்வராக ஏற்றுக் கொள்வோம் எனவும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

நூற்றுக்கணக்கான தொண்டர்கள் ஒரே இடத்தில் கூடியுள்ளதால்,சென்னையிலுள்ள முதல்வர் இல்லம் அமைந்துள்ள பகுதி பரபரப்பாக காட்சியளிக்கிறது.

அடுத்த செய்தி