ஆப்நகரம்

அன்பிற்கு வடிவம் தந்த மதுரை தொழிலதிபர்..! காலமான மனைவிக்கு 6 அடியில் மெழுகு சிலை

மதுரை அருகே காலமுற்ற மனைவிக்கு மெழுகு சிலையை அமைத்துள்ள தொழிலதிபர்.

Samayam Tamil 11 Sep 2020, 7:16 pm
மனைவியின் இறப்பை தாங்கிக்கொள்ளாமல் அவருக்கு 6 அடியில் மெழுகு சிலையை உருவாகியுள்ள தொழிலதிபர்.
Samayam Tamil husband made 6 feet wax statue for deceased wife in madurai
அன்பிற்கு வடிவம் தந்த மதுரை தொழிலதிபர்..! காலமான மனைவிக்கு 6 அடியில் மெழுகு சிலை


சேதுராமன் - பிச்சைமணியம்மாள்

மதுரை மாவட்டம் மேலபொன்னகரத்தைச் சேர்ந்தவர் சேதுராமன். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், மனைவி பிச்சைமணியம்மாள் வயதுமூப்பு காரணமாக கடந்த அக்டோபர் 8 ஆம் தேதி இயற்கை எய்தினார்.

48 ஆண்டுகால வாழ்க்கை

கடந்த 48 ஆண்டுகளாக குடும்ப வாழக்கையில் ஒன்றாக பயணித்து நற்பெயர், பொருள், வெற்றி என அனைத்துக்கும் காரணமாக இருந்த மனைவியின் இறப்பிலிருந்து நீங்கமுடியாமல் தவித்து வந்த சேதுராமன், மனைவிக்கு புது உருவத்தை கொடுத்து தன்னுடன் இருக்க ஒரு முடிவை செய்துள்ளார்.

சிற்பியும் ஓவியரும்

அதன்படி, வில்லாபுரத்தைச் சேர்ந்த சிற்பி பிரசன்னா மற்றும் ஓவியர் மருது ஆகியோரின் உதவியின்படி மனைவின் 6 அடி உருவச்சிலையை உருவாக்கியுள்ளார். அந்த சிலையானது, நவீன தொழில்நுட்பத்தை உள்ளடக்கி ஃபைபரால் செய்யப்பட்டுள்ளது.

பிச்சைமணியம்மாள் சிலை

அந்த அழகிய சிலையை தனது வீட்டில் ஒரு அறையில் அமர்த்தியுள்ள சேதுராமன், அதற்கு மாலை அணிவித்து பூஜை செய்து வருகிறார். சேதுராமனின் இரு மகன்களும் தாயின் உருவச்சிலை மீது மலர்தூவி மரியாதை செய்து வருகின்றனர்.

உறவினர்கள் வியப்பு

மனைவி இறந்த 30 வது நாளில் அவரை போலவே ஒரு உருவச்சிலையை உருவாகியுள்ள சேதுராமனின் செயலுக்கு அவரது உறவினர்கள் மட்டுமின்றி அப்பகுதியை சேர்ந்தவர்கள் நெகிழ்ந்துள்ளனர். அந்த சிலையை பார்க்க, அப்பகுதியில் உள்ளவர்களும், சேதுராமனின் தொழிலை சார்ந்தவர்களும் அவரது வீட்டிற்கு படையெடுத்து வருவதும், மலர் தூவி மரியாதை செய்வதும், சேதுராமனின் எல்லையில்லா அன்பிற்கு எடுத்துக்காட்டாக உள்ளது.

அன்பின் வடிவம்

சேதுராமனின் இந்த செயலால், இழந்த மனைவியை வேறொரு ரூபத்தில் தினம் தினம் பார்க்கும் வாய்ப்பையும், தாயின் பிரிவால் வாடும் பிள்ளைகளுக்கு பெரும் ஆறுதல் கொடுத்துள்ளது.

அடுத்த செய்தி