ஆப்நகரம்

மனைவியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த முன்னாள் ராணுவ வீரர்!

திருநெல்வேலி மாவட்டம், கடையம் பகுதியில் குடும்ப பிரச்சனை காரணமாக மனைவியை, அவரது கணவரே கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.

Samayam Tamil 3 Aug 2018, 4:38 pm
திருநெல்வேலி மாவட்டம், கடையம் பகுதியில் குடும்ப பிரச்சனை காரணமாக மனைவியை, அவரது கணவரே கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.
Samayam Tamil 65257625
மனைவியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த முன்னாள் ராணுவ வீரர்!


திருநெல்வேலி மாவட்டம் கடையம் அருகே உள்ள அருணாச்சலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மரிய தீபா(40). முன்னாள் பஞ்சாயத்து கவுன்சிலரான இவர், அதிமுக கட்சியிலிருந்து வெளியேறி, தற்போது திமுக கட்சியின் உறுப்பினராக உள்ளார். இவரது கணவர் டி செல்வம்(50) ராணுவ வீரராக பணியாற்றிவர்.

காதல் திருமணம் செய்த இவர்களுக்கு, பல ஆண்டுகளாக குழந்தை பிறக்காததால் இருவரும் சேர்ந்து ஒரு பெண்குழந்தையை தத்தெடுத்து வளர்த்துள்ளனர். அந்த குழந்தைக்கு தற்போது எட்டு வயதாகிறது. இந்த நிலையில் செல்வம் கடந்த 5 வருடங்களுக்கு முன் ராணுவத்திலிருந்து ஓய்வுபெற்று சொந்த ஊர் திரும்பினார். அதன்பிறகு தான் பிரச்சனைகள் ஆரம்பித்தது. மரிய தீபா அரசியல் சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபடுவது செல்வத்திற்கு பிடிக்கவில்லை. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி பிரச்சனைகள் ஏற்பட கடந்த 4 ஆண்டுகளாக இருவரும் ஒரே ஊரில் தனித்தனியே வசித்து வந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து செல்வம், விவகாரத்துக் கேட்டு தனது மனைவியை வற்புறுத்தி உள்ளார். ஆனால் அவரது மனைவி இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த செல்வம் இன்று காலை (வெள்ளிக்கிழமை) வீட்டின் வாசலில் நின்று கொண்டிருந்த தனது மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்து தப்பிச் சென்றுள்ளார். இதில் மரிய தீபா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள கடையம் போலீசார், தலைமறைவான செல்வத்தை தேடி வருகின்றனர்.

அடுத்த செய்தி