ஆப்நகரம்

மனைவியின் கழுத்தை நெறித்துக் கொன்ற கணவன் கைது

சேலத்தைச் சேர்ந்த மாதேஸ்வரன் என்ற 27 வயது நபர் வீடு திரும்பாத மனைவியை கயிறு கொண்டு கழுத்தை இறுக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Samayam Tamil 24 Jan 2019, 12:36 pm
சேலத்தைச் சேர்ந்த மாதேஸ்வரன் என்ற 27 வயது நபர் வீடு திரும்பாத மனைவியை கயிறு கொண்டு கழுத்தை இறுக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து ஸ்டீல் பிளாண்ட் காவல் நிலையம் மாதேஸ்வர்மீது வழக்கு தொடர்ந்துள்ளது. அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Samayam Tamil death


பள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் மாதேஸ்வரன்(27). இவரது மனைவி சசிகலா(22). இவர் தலைவாய்பட்டியைச் சேர்ந்தவர். சசிகலா கர்ப்பமாக இருந்தபோது பிறந்தவீட்டுக்குச் சென்றுள்ளார். பிரசவம் முடிந்தும் அவர் கணவன் வீட்டுக்கு வர மறுத்தார்.

இதனைத் தொடர்ந்து மாதேஸ்வரன் மாமனார் வீட்டுக்குச் சென்று மனைவியை வீட்டுக்கு வரும்படி அழைத்துள்ளார். சசிகலா வர மறுக்கவே மாதேஸவன் அவரை மூர்கமாக அறைக்குள் தள்ளிப்போய் அறையை உட்பக்கம் சாத்திக்கொண்டு சசிகலாவின் கழுத்தை கயிற்றை கொண்டு இறுக்கியதில் சசிகலா காலாமார். இதனைத் தொடர்ந்து மாதேஸ்வரன் ஸ்டீல் பிளாண்ட் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

அடுத்த செய்தி