ஆப்நகரம்

இவர்தான் காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர்!!

காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக மத்திய நீர்வள ஆணையர் ஹசைன் மசூத் மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ளார்.

Samayam Tamil 7 Jun 2018, 3:30 am
காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக மத்திய நீர்வள ஆணையர் ஹசைன் மசூத் மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ளார்.
Samayam Tamil இவர்தான் காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர்!!
இவர்தான் காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர்!!


கர்நாடகா மற்றும் தமிழகம் இடையே பல ஆண்டுகளாக நீடித்து வந்த காவிரி பிரச்சனையில், கடந்த பிப்ரவரி மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பில் 6 வார காலங்களுக்கு காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான வரைவு அறிக்கையை தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து, மத்திய அரசு கர்நாடக தேர்தலை மனதில் வைத்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பணியை தள்ளிப் போட்டது. இதனால், பல்வேறு கண்டனங்களுக்கு மத்திய அரசு ஆளானது.

இதைத் தொடர்ந்து, மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான வரைவு அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. பின்னர், அது காவிரி மேலாண்மை ஆணையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, அதன் வரம்புகள் வரையறுக்கப்பட்டன.

இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக மத்திய நீர்வள ஆணையர் ஹசைன் மசூத் நியமிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனிடையே, காவிரி மேலாண்மை ஆணையத்தை விரைந்து அமைக்க வலியுறுத்தி,தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அளித்த கடிதத்தை அதிமுக எம்பிக்கள் மத்திய நீர் வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம் அளித்தனர்.

அடுத்த செய்தி