ஆப்நகரம்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மெரினாவில் கூடிய மாணவர்கள் கைது!!

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மெரினாவில் இன்று போராட்டம் நடந்த வந்த மாணவர்கள் அனைவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து மெரினா கடற்கரை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

TOI Contributor 27 Feb 2017, 2:52 pm
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மெரினாவில் இன்று போராட்டம் நடந்த வந்த மாணவர்கள் அனைவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து மெரினா கடற்கரை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Samayam Tamil hydro carban protestors in marina arressted by chennai police
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மெரினாவில் கூடிய மாணவர்கள் கைது!!


புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே நெடுவாசல் உள்ளிட்ட 13 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான திட்ட ஆய்வுக்கு மத்திய அமைச்சரவை கடந்த 15-ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. இங்கு ஹைட்ரோ கார்பன் எடுக்க கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. முன்பு மீத்தேன் எடுக்க திட்டமிட்டு அதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியதால் தற்போது வேறு பெயரில் இந்தத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தை செயல்படுத்தினால், விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்று அந்தப் பகுதி விவசாயிகள் கடந்த 9 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு தமிழகம் முழுவதும் ஆதரவு கிளம்பியுள்ளது.

இந்நிலையில் இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சென்னை மெரினாவில் உள்ள காந்தி சிலை அருகே மாணவர்கள் கூடினர். இதையடுத்து இவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், மெரினாவில் மாணவர்கள் கூடாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Hydro Carban protestors in Marina arressted by chennai police

அடுத்த செய்தி