ஆப்நகரம்

ஹைட்ரோ கார்பன் திட்டம்: கோட்டைக்காடு போராட்டம் வாபஸ்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த கோட்டைக்காடு மக்கள், தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.

TNN 4 Mar 2017, 5:34 pm
புதுக்கோட்டை: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த கோட்டைக்காடு மக்கள், தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.
Samayam Tamil hydro carbon issue kottaikadu protest ends
ஹைட்ரோ கார்பன் திட்டம்: கோட்டைக்காடு போராட்டம் வாபஸ்


புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே நெடுவாசல் உள்ளிட்ட இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான திட்ட ஆய்வுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

குறிப்பாக, புதுக்கோட்டை நெடுவாசலில் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், நெடுவாசல் மக்களுக்கு ஆதரவாக அருகில் உள்ள கிராம மக்கள் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபடத் வந்தனர்.

இந்நிலையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த புதுக்கோட்டை மாவட்டத்தின் கோட்டைக்காடு கிராம மக்கள், தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கணேஷ் நடத்திய பேச்சுவார்த்தையின் முடிவில், தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொள்வதாக அக்கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.
Hydro carbon issue: Kottaikadu protest ends

அடுத்த செய்தி