ஆப்நகரம்

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஏதிராக நூதன போராட்டம்

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஏதிராக நெடுவாசல் மக்கள் நூதன போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

TNN 26 Jun 2017, 8:58 pm
புதுக்கோட்டை : ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஏதிராக நெடுவாசல் மக்கள் நூதன போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
Samayam Tamil hydro carbon protest in neduvaasal
நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஏதிராக நூதன போராட்டம்


புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் உள்ளிட்ட 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டதிற்கு மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் ஒப்புதல் அளித்தது. இதற்கு தமிழகத்தில் கடும் ஏதிர்ப்பு கிளம்பிய நிலையில் நெடுவாசல் கிராமத்தை மையமாகக் கொண்டு தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்தது.

இதனை தொடர்ந்து மத்திய , மாநில அரசை சார்ந்தவர் மக்களின் விருப்பம் இல்லாமல் இந்த் திட்டம் நிறைவேற்றப்படாது என்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதனைதொடர்ந்து தமிழகம் முழுவதும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஏதிரான போராட்டம் தற்காலிகாமாக நிறுத்தப்படுவதாக மக்கள் அறிவித்தனர்.

இந்தநிலையில் மார்ச் மாதம் 27-ம் தேதி ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் தொடர்பாக தனியார் நிறுவனங்களுடன் மத்திய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. இதனால் அதிருப்தியடைந்த நெடுவாசல் மக்கள் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு ஏதிராக மீண்டும் இரண்டாம் கட்ட போராட்டத்தை துவங்கினார்கள்.இரண்டாம் கட்ட போராட்டத்தின் 76வது நாளான இன்று நடந்த போராட்டத்தில், கழிவுகளை தெர்மாக்கோல் வைத்து மூடி, நூதன எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

அடுத்த செய்தி