ஆப்நகரம்

நெடுவாசல் போராட்டம் : முக்கிய அறிவிப்பு இன்று வெளியீடு

நம்மாழ்வார் பிறந்ததினமான இன்று நெடுவாசல் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராம மக்களுடன் கலந்தாலோசித்து போராட்டம் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும் என்று போராட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

TNN 6 Apr 2017, 8:42 am
புதுக்கோட்டை : நம்மாழ்வார் பிறந்ததினமான இன்று நெடுவாசல் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராம மக்களுடன் கலந்தாலோசித்து போராட்டம் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும் என்று போராட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
Samayam Tamil hydrocarban plant neduvasal people plan to protest
நெடுவாசல் போராட்டம் : முக்கிய அறிவிப்பு இன்று வெளியீடு


புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் உள்ளிட்ட 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டதிற்கு மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் ஒப்புதல் அளித்தது. இதற்கு தமிழகத்தில் கடும் ஏதிர்ப்பு கிளம்பிய நிலையில் நெடுவாசல் கிராமத்தை மையமாகக் கொண்டு தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்தது.

இதனை தொடர்ந்து மத்திய , மாநில அரசை சார்ந்தவர் மக்களின் விருப்பம் இல்லாமல் இந்த் திட்டம் நிறைவேற்றப்படாது என்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதனைதொடர்ந்து தமிழகம் முழுவதும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஏதிரான போராட்டம் தற்காலிகாமாக நிறுத்தப்படுவதாக மக்கள் அறிவித்தனர்.

இந்தநிலையில் கடந்த மாதம் 27-ம் தேதி ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் தொடர்பாக தனியார் நிறுவனங்களுடன் மத்திய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. இதனால் அதிருப்தியடைந்த நெடுவாசல் மக்கள் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு ஏதிராக போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

இயற்கை வழி வேளான் விஞ்ஞானி நம்மாழ்வார் பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட இருக்கிறது. இந்த பிறந்தநாள் விழாவில் நெடுவாசல் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராம மக்களுடன் கலந்தாலோசித்து போராட்டம் பற்றிய அறிவிப்பை வெளியிட உள்ளனர்.
hydrocarban plant : neduvasal people plan to protest

அடுத்த செய்தி