ஆப்நகரம்

ஹைட்ரோ கார்பன்: கேன்சர், சிறுநீரக செயலிழப்பு உறுதி: நாசா விஞ்ஞானி

புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து 7வது நாளாக ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

TNN 12 Mar 2017, 12:19 pm
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே உள்ள கல்லிக்கொல்லை, நல்லாண்டார் கொல்லை, வாணக்கன்காடு, கோட்டைக்காடு உள்ளிட்ட பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக கடந்த 6 நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது. 7வது நாளான நேற்று, களத்துக்கு ஊர்வலமாக வந்தனர். தோழன்பட்டி, பேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 300 பேர், கருப்பு கொடியேந்தியும், சங்கு ஊதிக் கொண்டும் இளைஞர்கள் போராட்டம் நடத்தினர்.
Samayam Tamil hydrocarbon project there is possibilities to cancer kidney failure and so many disease says nasa scientist
ஹைட்ரோ கார்பன்: கேன்சர், சிறுநீரக செயலிழப்பு உறுதி: நாசா விஞ்ஞானி


அப்போது பேசிய இளைஞர் ஒருவர் கூறுகையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தினால் அகதிகளாக மாற வேண்டிய நிலை ஏற்படும். அதோடு இப்பகுதி பாலைவனமாக மாறுவதோடு மனித உயிர்கள் வாழ முடியாத சூழ்நிலையும் ஏற்படும். இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளித்த மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டது என்று அறிவித்தால்தான் நாம் இந்த போராட்டத்தை கைவிடவேண்டும் என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக நாசா விண்வெளி நிலைய முன்னாள் விஞ்ஞானி பார்த்திபன் கூறுகையில், `ஷேல்காஸ் என்ற மீத்தேன் வாயுவைத்தான் ஹைட்ரோ கார்பன் என்ற பெயரில் மத்திய அரசு செயல்படுத்த நினைக்கிறது. இது போன்ற வாயுக்களை கிராமப்பகுதிகளில் மக்கள் வசிக்கும் இடங்களில் நிறைவேற்றினால், கேன்ச, சிறுநீரக செயலிழப்பு போன்ற நோய்கள் மக்களுக்கு உண்டாகும்.

மேலும், இத்திட்டத்திற்காக 6000 அடிக்குகீழ் துளையிட்டு வாயு எடுப்பதற்காக 650 வேதிப் பொருட்களை செலுத்தி வெடிக்க செய்யும்போது வெற்றிடம் ஏற்படும். அந்த வெற்றிடங்களில் விஷத்தன்மை கொண்ட பாக்டிரியாக்கள் வளரும் நிலை உருவாகும். இது இப்பகுதியில் வசிக்கும் மக்களை தாக்கி நோய் ஏற்படுத்தும் அவல நிலை உண்டாகும் என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி