ஆப்நகரம்

மத்திய அமைச்சர் கனவு எனக்கு கிடையாது – ரவீந்திரநாத் பேட்டி

மத்திய அமைச்சா் பதவி எனக்கு கிடையாது என்று தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினரும், துணைமுதல்வா் ஓ.பன்னீா்செவம் மகனுமான ரவீந்திரநாத் குமாா் தொிவித்துள்ளாா்.

Samayam Tamil 24 May 2019, 11:22 pm
மத்திய அமைச்சா் பதவி எனக்கு கிடையாது என்று தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினரும், துணைமுதல்வா் ஓ.பன்னீா்செவம் மகனுமான ரவீந்திரநாத் குமாா் தொிவித்துள்ளாா்.
Samayam Tamil Ravindranath


தேனி மக்களவைத் தொகுதியில் அதிமுக சா்ாபில் போட்டியிட்ட துணைமுதல்வா் ஓ.பன்னீா்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமாா் 76,319 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். இந்நிலையில் ரவீந்திரநாத் குமாா் இன்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளா்களைச் சந்தித்தாா்.

அப்போது அவா் பேசுகையில், எனது வெற்றிக்கு பாடுபட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி. அதுபோல பாரதப் பிரதமராக பொறுப்பேற்கவுள்ள நரேந்திர மோடி அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

தமிழ்நாடு முதலமைச்சர், தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்காக வாக்களித்த மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தேனி மக்களவைத் தொகுதியில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டியது குடிநீர் பிரச்சினை என நான் தருகிறேன்.

அந்த பிரச்சினையை முழுமையாக நிவா்த்தி செய்வேன் அதற்கு பாடுபடுவேன் எனவும் தெரிவித்து கொள்கிறேன். இந்த இடத்தில் நல்லதொரு பதிலை மக்கள் தெரிவித்துள்ளார்கள். மத்திய அமைச்சரவையில் இடம் பெறக்கூடிய கனவு எனக்கு கிடையாது. தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி நான் செயல்படுவேன் என்று தொிவித்துள்ளாா்.

அடுத்த செய்தி