ஆப்நகரம்

ஜெயலலிதா மரணம்; எந்த விசாரணைக்கும் நான் தயார்: சசிகலா

''அம்மா மரணம் தொடர்பான எந்த விசாரணைக்கும் நான் தயார். என் மனசாட்சி எனக்குத் தெரியும். அவரைப் பிரிந்த வேதனை எனக்கு மட்டும்தான் தெரியும்'' என்று தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தெரிவித்துள்ளார்.

TOI Contributor 9 Feb 2017, 10:50 am
''அம்மா மரணம் தொடர்பான எந்த விசாரணைக்கும் நான் தயார். என் மனசாட்சி எனக்குத் தெரியும். அவரைப் பிரிந்த வேதனை எனக்கு மட்டும்தான் தெரியும்'' என்று தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தெரிவித்துள்ளார்.
Samayam Tamil i am ready to face any enquiry about ammas death
ஜெயலலிதா மரணம்; எந்த விசாரணைக்கும் நான் தயார்: சசிகலா


மேலும் அந்தப் பேட்டியில் அவர் கூறியவதாவது:

ஒவ்வொரு நிமிடமும், எப்படி அம்மாவைப் பார்த்தேன் என்பதை வெளியே சொல்ல நான் நினைக்கவில்லை. இது அங்கு இருந்த செவிலியர்களுக்கு தெரியும். எனக்கு எதிராக திமுக-காரர்கள் பரப்பும் செய்திகளைப் பற்றி கவலையில்லை. இவ்வளவு நாள் எங்களுடன் இருந்த பன்னீர் செல்வம் தற்போது விசாரணை கமிஷன் அமைப்போம் என்று கூறுவது என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை. இந்த பச்சை துரோகத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

எவ்வளவு மருத்துவர்கள், லண்டன் மருத்துவர், எய்ம்ஸ் மருத்துவர்கள், சிங்கப்பூர் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். பிசியோதெரபி கொடுத்தனர். அம்மா டிவி கூட பார்த்தார்கள். எங்களுடைய டிவியில் அனுமன் சீரியல் பார்த்தார்கள். பழைய பாடல்கள் பார்த்தார்கள். சிடி போட்டு காட்டினோம். வீட்டுக்கு அழைத்து செல்ல 29ஆம் தேதி நாள் பார்த்தேன். இந்நிலையில்தான் மரணம் ஏற்பட்டது.

அப்படி இருக்கையில், இப்படி திடீருன்னு ஒருவர் கமிஷன் அமைப்பது பற்றி எங்களுக்கு கவலை அளிக்கிறது. அம்மாவுக்கு செய்யும் துரோகம் இது. பி. ஹெச். பாண்டியன் போன்றோர் எல்லாருமே ஒரு காலத்தில் , தலைவர் (எம்ஜிஆர்) இறந்தபோது எப்படி நடந்து கொண்டனர். அம்மா தலைமைப் பொறுப்பை ஏற்றபோது, கூட அவர்கள் மாறவில்லை. தற்போது அவர்களது நிலைபாட்டில் மாற்றம் வருகிறது. என்னைப் பொறுத்தவரை என்னுடைய தொண்டர்கள், கழகத்தினர் அனைவரும் இணைந்து ஒரே குழு என்ற நிலையில் சென்று கொண்டு இருக்கிறோம்.

முதல் நாள் மருத்துவமனைக்கு அழைத்து வந்தேன். மருத்துவர்கள் கூட ரொம்ப சீக்கிரம் கொண்டு வந்து விட்டீர்கள். தாமதம் செய்யவில்லை என்று அனுமதி செய்த அன்று இரவு 3 மணிக்கு சொன்னார்கள். என்னைப் பொறுத்தவரை, எந்த விசாரணைக்கும் நான் தயார்.

என் மீதான வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. எனக்கு நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை உள்ளது.

நெருக்கடிகள், சவால்கள் சூழ்ந்து இருக்கும் நிலையிலும், நான் முதல்வராக பதவியேற்பேன். அம்மாவின் ஆசியோடு பதவி ஏற்பேன். அம்மா வழியில் பணியாற்றுவேன்.

இவ்வாறு தெரிவித்தார்.

I am ready to face any enquiry about Amma's death

அடுத்த செய்தி