ஆப்நகரம்

கொலை மிரட்டல் விடுக்கின்றனர்: தீபா பரபரப்பு குற்றச்சாட்டு

தனது செல்போனுக்கு கொலை மிரட்டல் வருவதாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சகோதரர் மகள் குற்றம் சாட்டியுள்ளார்.

TNN 30 Apr 2017, 9:53 pm
சென்னை: தனது செல்போனுக்கு கொலை மிரட்டல் வருவதாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சகோதரர் மகள் குற்றம் சாட்டியுள்ளார்.
Samayam Tamil i am receiving death threat deepa jayakumar
கொலை மிரட்டல் விடுக்கின்றனர்: தீபா பரபரப்பு குற்றச்சாட்டு


தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் காலமானார். அதனைத்தொடர்ந்து, அரசியலில் குதித்த அவரது சகோதரர் மகள் தீபா ஜெயக்குமார், எம்ஜிஆர்-அம்மா-தீபா பேரவை என்ற பேரவையை தொடங்கினார். முதலில், பொதுமக்கள் மத்தியில் அவருக்கு செல்வாக்கு காணப்பட்ட போதிலும், நாளடைவில் அது மங்கியது.

இதனிடையே, பேரவைக்கு நிர்வாகிகளை நியமனம் செய்ததில் அவருக்கும் அவரது கணவர் மாதவனுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து, பேரவையில் இருந்து வெளியேறிய மாதவன், தனிக்கட்சியை துவங்கினார். மேலும், பேரவைக்கு உறுப்பினர் சேர்க்கை படிவம், ஆர்கே நகர் இடைத்தேர்தல் செலவு ஆகியவை மூலம் பணமோசடி செய்தார் என தீபா மீது புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், தனது செல்போனுக்கு கொலை மிரட்டல் வருவதாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சகோதரர் மகள் தீபா ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

ராமதாஸின் அடியாட்கள் விடிய விடிய என்னை பெண் என்றும் பாராமல் எனது கைப்பேசிக்கு கொலை மிரட்டல் விடுத்ததோடு, ஆபாசமாக திட்டி செய்திகளை அனுப்புகிறார்கள் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், அம்மாவின் வாரிசான என்னை அடியாட்கள் மூலம் நான் அரசியல் களத்திலிருந்து ஓடவேண்டும் என்று மிரட்டி பார்க்கிறார். நான் எந்த சல சலப்புக்கும் அஞ்சமாட்டேன் என்பதை எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் தீபா குறிப்பிட்டுள்ளார்.
I am receiving death threat: Deepa jayakumar

அடுத்த செய்தி