ஆப்நகரம்

தமிழ் மாணவர்களுக்கு எதிராக பிரகாஷ் ராஜ் பேசினாரா?... இதோ விளக்கம்

இயற்கை ஒத்துழைத்தால் மேட்டூர் அணை மேட்டூர் அணையில் இருந்து குறுவை பாசனத்திற்காக தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்

Samayam Tamil 5 May 2019, 6:51 pm
இயற்கை ஒத்துழைத்தால் மேட்டூர் அணை மேட்டூர் அணையில் இருந்து குறுவை பாசனத்திற்காக தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்
Samayam Tamil prakash raj


சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறாத 1500 ஆசிரியர்களை பணி நீக்கம் செய்யும் பிரச்சனையில் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த வேண்டிய நிலையில் உள்ளோம்.

டெல்லி மாணவர்களின் வேலைவாய்ப்பை தமிழக மாணவர்கள் தட்டிப் பறித்ததாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளதற்கு நடிகர் பிரகாஷ்ராஜ் ஆதரவு தெரிவித்துள்ளது குறித்து கருத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடிகர் பிரகாஷ்ராஜ் கர்நாடகத்தைச் சேர்ந்தவர் என்றும் அதனால்தான் இவ்வாறு கூறுவதாகவும் தெரிவித்தார்.

முதலமைச்சர் பழனிச்சாமியின் கருத்துக்கு பதிலளிக்கும் விதமாகவும், மறுப்பு தெரிவித்தும் பிரகாஷ் ராஜ் பேசியுள்ளார்.

பிரகாஷ் ராஜ் கூறுகையில், “’என்னுடைய கருத்து அரசியலாக்கப்பட்டுள்ளது.
நான் தமிழக மக்களுக்கு எதிராக செயல்படுகிறேன் என்ற குற்றச்சாட்டு பச்சைப் பொய் என நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

என் கருத்து திரித்து கூறப்பட்டுள்ளது; இந்த விவகாரத்தில் நான் மன்னிப்பு கேட்கமாட்டேன். நான் ஒருபோதும் தமிழர்களுக்கு எதிராக பேசியதில்லை.” என தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி