ஆப்நகரம்

புகார் கொடுத்தவர் யார் என்றே தெரியாது: தீபா அந்தர் பல்டி

பண மோசடி புகார் கொடுத்தவர் யார் என்றே தனக்கு தெரியாது என எம்ஜிஆர்-அம்மா-தீபா பேரவையின் பொதுச்செயலாளர் தீபா தெரிவித்துள்ளார்.

TNN 24 Apr 2017, 12:38 am
சென்னை: பண மோசடி புகார் கொடுத்தவர் யார் என்றே தனக்கு தெரியாது என எம்ஜிஆர்-அம்மா-தீபா பேரவையின் பொதுச்செயலாளர் தீபா தெரிவித்துள்ளார்.
Samayam Tamil i dont know the person who gave complaint deepa jayakumar
புகார் கொடுத்தவர் யார் என்றே தெரியாது: தீபா அந்தர் பல்டி


தமிழக முதல்வராக் இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், அரசியலில் குதித்த அவரது சகோதரர் மகள் தீபா, எம்ஜிஆர்-அம்மா-தீபா பேரவையை தொடங்கினார். முதலில், பொதுமக்கள் மத்தியில் அவருக்கு செல்வாக்கு காணப்பட்ட போதிலும், நாளடைவில் அது மங்கியது.

இதனிடையே, பேரவைக்கு நிர்வாகிகளை நியமனம் செய்ததில் அவருக்கும் அவரது கணவர் மாதவனுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து, பேரவையில் இருந்து வெளியேறிய மாதவன், தனிக்கட்சியை துவங்கினார்.

இத்தகைய சூழலில், பேரவைக்கு உறுப்பினர் சேர்க்கை படிவம், ஆர்கே நகர் இடைத்தேர்தல் செலவு ஆகியவை மூலம் ரூ.20 கோடி மோசடி செய்ததாக தீபா மீது மாம்பலம் காவல் நிலையத்தில் நெசப்பாக்கத்தை சேர்ந்த ஜானகிராமன் என்பவர் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில், தீபா வீட்டுக்கு சென்ற காவல்துறையினர், அவரிடம் விசாரணை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பண மோசடி புகார் கொடுத்தவர் யார் என்றே தனக்கு தெரியாது என எம்ஜிஆர்-அம்மா-தீபா பேரவையின் பொதுச்செயலாளர் தீபா தெரிவித்துள்ளார்.

இந்த புகாரை சட்ட ரீதியாக சந்திப்பேன் என கூறிய தீபா, அரசியலை விட்டு என்னை விரட்ட சதி நடக்கிறது என குற்றம் சாட்டினார்.

மேலும், அதிமுக-வில் இருந்து அழைத்தாலும் அதனை ஏற்கமாட்டேன். அதிமுகவின் இரு அணிகள் இணைந்தாலும் தமிழகத்தில் நல்லாட்சியை கொடுக்க முடியாது எனவும் தீபா தெரிவித்தார்.
I dont know the person who gave complaint: Deepa Jayakumar

அடுத்த செய்தி