ஆப்நகரம்

முதல்வருடன் சந்திப்பு ஏன்? தம்பிதுரை விளக்கம்

தொகுதி பிரச்னை தொடர்பாகவே முதல்வரை சந்தித்தேன் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் நடைபெற்ற சந்திப்பு குறித்து மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை விளக்கம் அளித்துள்ளார்.

TNN 17 Apr 2017, 2:56 pm
சென்னை: தொகுதி பிரச்னை தொடர்பாகவே முதல்வரை சந்தித்தேன் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் நடைபெற்ற சந்திப்பு குறித்து மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை விளக்கம் அளித்துள்ளார்.
Samayam Tamil i met cm for constituency issues thambidurai
முதல்வருடன் சந்திப்பு ஏன்? தம்பிதுரை விளக்கம்


இரட்டை இலை சின்னதை பெற்று தர லஞ்சம் வாங்கியதாக தலைநகர் தில்லியில் சுகேஷ் சந்திரா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், டிடிவி தினகரனிடம் இருந்து லஞ்சம் பெற்றதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிகிறது.

அவர் அளித்துள்ள வாக்குமூலத்தின் அடிப்படையில், டிடிவி தினகரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரிடம் விசாரணை மேற்கொள்ள தில்லி குற்றப்பிரிவு போலீசார் நாளை சென்னை வரவுள்ளனர்.

இதனிடையே, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, தலைமை செயலகத்தில் இன்று சந்தித்தார். இது அரசியால் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் நடைபெற்ற சந்திப்பு குறித்து மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை விளக்கம் அளித்துள்ளார்.

தொகுதி பிரச்சனை தொடர்பாகவே முதலமைச்சரை சந்தித்தேன். கட்சிக்குள் எந்த பிளவும் இல்லை. அமைச்சர்கள் எந்த நெருக்கடியும் தரவில்லை. ஆட்சி சீராக உள்ளது என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை விளக்கம் அளித்துள்ளார்.
I met CM for constituency issues: Thambidurai

அடுத்த செய்தி