ஆப்நகரம்

முடிவுக்கு வந்த அரசியல் வாழ்வு- ஒட்டுமொத்தமாக விலகினார் ஜெ.தீபா!

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, தான் அரசியலில் இருந்து விலகுவதாக தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 30 Jul 2019, 1:10 pm
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா. இவர் ஜெயலலிதா மறைவிற்கு பின், அரசியலில் இறங்குவதாக அறிவித்தார். அதிமுகவில் தனக்கு முக்கியத்துவம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மிகுந்த ஏமாற்றம் அடைந்தார்.
Samayam Tamil J Deepa


இதையடுத்து ”எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை” என்ற அமைப்பை தொடங்கினார். இதற்கிடையில் அவருடைய கணவர் மாதவன் தனிக் கட்சி தொடங்கினார். சில மாதங்களுக்கு பின், இரு கட்சிகளும் ஒன்றிணைக்கப்பட்டு விட்டதாக தீபா அறிவித்தார்.

ஓபிஎஸ் ஏன் இப்படி செய்தார்? அதிமுகவில் வெடிக்கும் அடுத்த டைம்-பாம்!

ஆனால் இவருடைய அரசியலுக்கு மக்கள் மத்தியில் எந்தவித வரவேற்பும் இல்லை. இதையடுத்து அதிமுகவில் சேரவுள்ளதாக ஜெ.தீபா கூறியிருந்தார். இந்நிலையில் தான் அரசியலுக்கு முழுக்கு போடுவதாக அறிவித்துள்ளார்.

திமுக மீது இப்படியொரு கவர்ச்சியா? மைத்ரேயன் அளித்த ஆச்சரியம் தரும் பதிலைக் கேளுங்க...!

இதுகுறித்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், என்னுடைய குடும்பம் தான் முக்கியம். எனக்கு அரசியல் வேண்டாம். யாரும் என்னை தொலைபேசியில் அழைக்க வேண்டாம்.

Hospital Day: முத்துலட்சுமி ரெட்டி பிறந்த நாள் மருத்துவமனை தினமாக கொண்டாடப்படும் – தமிழக அரசு

மீறி அழைத்தால் போலீசில் புகார் அளிப்பேன். என்னுடைய எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையை அதிமுக உடன் இணைத்து விட்டேன். எனவே முழுமையாக பொது வாழ்க்கையில் இருந்து விலகுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி