ஆப்நகரம்

கொலை மிரட்டல்: ஓபிஎஸ் அணியின் வேட்பாளர் மதுசூதனன் புகார்

கொலை மிரட்டல் வருவதாக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த அதிமுக-வின் மூத்த தலைவர் மதுசூதனன் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

TNN 21 Mar 2017, 1:23 pm
சென்னை: கொலை மிரட்டல் வருவதாக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த அதிமுக-வின் மூத்த தலைவர் மதுசூதனன் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
Samayam Tamil i received death threat madhusudhanan gave complaint in dgp office
கொலை மிரட்டல்: ஓபிஎஸ் அணியின் வேட்பாளர் மதுசூதனன் புகார்


தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா காலமானதையடுத்து, அவரது தொகுதியான ஆர்கே நகர் தொகுதி காலியானது. அதற்கு வருகிற ஏப்ரல் 12-ம் தேதியன்று தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த தொகுதியில், அதிமுக சசிகலா அணி சார்பில் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அதிமுக பன்னீர்செல்வம் அணி சார்பில் அக்கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அங்கு எப்படியேனும் வெற்றி பெற்று விட வேண்டும் என இரு தரப்பினரும் முனைப்பு காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், தனக்கு கொலை மிரட்டல் வருவதாக பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த அதிமுக-வின் மூத்த தலைவர் மதுசூதனன் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். தேர்தலில் இருந்து வாபஸ் பெறாவிட்டால் கொலை செய்துவிடுவதாக டிடிவி தினகரனின் பெயரை சொல்லி மர்ம நபர்கள் மிரட்டல் விடுப்பதாக தனது புகாரில் மதுசூதனன் குறிப்பிட்டுள்ளார்.
I received death threat: Madhusudhanan gave complaint in DGP office

அடுத்த செய்தி