ஆப்நகரம்

கொரோனா தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்ளும் கடைசி நபராக நான் இருக்க வேண்டும் - சத்குரு

பெங்களூரு டெக் சம்மிட் 2020 என்ற ஆன்லைன் வாயிலாக நடந்த தொழில்நுட்ப மாநாட்டில் கலந்துகொண்ட ஈஷா சத்குரு கொரோனா தடுப்பு மருந்து குறித்து பேசினார்.

Samayam Tamil 23 Nov 2020, 4:58 pm
அமெரிக்காவின் பயோடெக் நிறுவனமான மாடர்னா தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி வெற்றிகரமாக செயல்படுவதாகவும் இந்த தடுப்பூசி 94.5 சதவீதம் வெற்றிகரமாக செயல்படுவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதுபோல, இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், பன்னாட்டு மருந்து நிறுவனமான அஸ்ட்ரா ஜெனெகாவும் இணைந்து ஒரு தடுப்பூசியை உருவாக்கி பரிசோதித்து வருகின்றன.
Samayam Tamil சத்குரு


உலகளவில் முன்னணி வகிக்கும் இந்த தடுப்பூசி, வயதானவர்கள் மற்றும் இளையவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு மருந்தை விநியோகிப்பது தொடர்பாக நாளையும், நாளை மறுநாளும் (நவம்பர் 24, 25) பிரதமர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி கலந்துக்கவுள்ளார். இந்நிலையில், கொரோனா தடுப்பு மருந்தை எடுத்து கொள்ளும் கடைசி நபராக நான் இருக்க விரும்புகிறேன் என ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார். அது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், ''மக்கள் நலனுக்காக தங்களின் உயிர்களை பணயம் வைத்து சேவையாற்றி வரும் மருத்துவப் பணியாளர்கள் மற்றும் காவல்துறையினருக்கு தான் முதலில் கொரோனா தடுப்பு மருந்தை கொடுக்க வேண்டும்.

மின்சாரம் துண்டிக்கப்படும், தென் கிழக்கே 590 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ள நிவர் புயல்

கொரோனா தடுப்பு மருந்தை பெற்று கொள்ளும் கடைசி நபராக நான் இருக்க விரும்புகிறேன். மேலும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் வயதானவர்கள் மற்றும் பிற நோய்களால் பாதிப்புகளுக்கு உள்ளாகி ஆபத்து நிலையில் இருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். இந்த தடுப்பு மருந்துகள் பயன்பாட்டுக்கு வந்தவுடன் அதில் ஊழல் நடப்பதற்கு வாய்ப்புள்ளது.

இதை தடுப்பதற்கு பொருளாதார நிலையில் வசதியாக இருப்பவர்கள் அதை குறிப்பிட்ட விலை கொடுத்து வாங்கும் விதமாக தடுப்பு மருந்துக்கு அரசு விலை நிர்ணயிக்க வேண்டும். அதில் இருந்து கிடைக்கும் நிதியை பயன்படுத்தி பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும். இதன் மூலம் அரசின் செலவுகளும் குறையும்'' இவ்வாறு சத்குரு கூறினார்.

அடுத்த செய்தி