ஆப்நகரம்

முட்டை சப்ளை நிறுவனம் மூலம் மெகா மோசடி அம்பலம்

தமிழக அரசின் மதிய உணவுத் திட்டத்திற்கு முட்டை சப்ளை செய்யும் நிறுவனம் மூலம் பொது விநியோகத்துறை இயக்குனர் சுதா தேவி மிகப்பெரிய மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

Samayam Tamil 9 Jul 2018, 1:22 pm
தமிழக அரசின் மதிய உணவுத் திட்டத்திற்கு முட்டை சப்ளை செய்யும் நிறுவனம் மூலம் பொது விநியோகத்துறை இயக்குனர் சுதா தேவி மிகப்பெரிய மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
Samayam Tamil white-eggs.jpg.653x0_q80_crop-smart


தமிழக அரசின் மதிய உணவுத் திட்டத்திற்கு கடந்த 1990ஆம் ஆண்டு முதல் கிறிஸ்டி என்ற நிறுவனம் முட்டை மற்றும் பிற பொருட்களை சப்ளை செய்து வருகிறது. பொது விநியோகத்துறையின் கீழ் இந்த பொருட்களை வாங்குவதில் முறைகேடு நடைபெறுவதாக வருமான வரித்துறைக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இதன் பேரில் தொடர்ந்து ஐந்து நாட்களாக சென்னை மற்றும் நாமக்கல் ஆகிய இரு மாவட்டங்களில் 100 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

இதில் மிகப்பெரிய அளவில் வரி ஏய்ப்பு, பணமதிப்பு நீக்கத்தின் போது கருப்புப் பணத்தை மாற்றியது போன்றவை தொடர்பான ஏராளமான ஆவணங்கள் சிக்கியுள்ளன. பொது விநியோகத்துறை இயக்குனர் சுதா தேவிக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், இது பற்றி கிறிஸ்டி நிறுவனத்தின் தலைவர் குமாரசாமியிடமும் நாமக்கல்லில் வைத்து தனியே விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உட்பட அரசியல் கட்சிகளுக்கு இதில் தொடர்பு உள்ளதை உறுதிசெய்யும் ஆதாரங்களாக ஓர் இடத்தில் 100 பென்ட்ரைவ்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சுதா தேவி இதற்காக இரண்டு அமைச்சர்களுடன் தொடர்பில் இருந்ததும் தெரிந்துள்ளது.

பணமதிப்பு நீக்க உத்தரவுக்குப் பின் கூட்டுறவு வங்கி மூலம் ரூ.245 கோடி வரை கருப்புப் பணம் மாற்றப்பட்டிருப்பதாக தெரிகிறது. அதற்கான ஆதாரங்களை நோக்கி விசாரணை நடைபெற்று வருகிறது. சோதனை நடக்கும் நேரத்தில் அதிக விவரங்களைத் தெரிவிக்க முடியாது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

அடுத்த செய்தி