ஆப்நகரம்

அரசியலில் இருந்து கொண்டே தொடர்ந்து நடிப்பேன்: சரத்குமாரின் அதிரடி

சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும் நடிகருமான சரத்குமார் தற்போது அரசியலில் மும்முரமாக இறங்கிவிட்ட நிலையில் மீண்டும் நடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ’அடங்காதே’ படத்தில் முக்கிய ரோலில் நடிக்க சரத்குமார் ஒப்பந்தமாகியுள்ளார்.

TOI Contributor 9 Sep 2016, 5:23 pm
சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும் நடிகருமான சரத்குமார் தற்போது அரசியலில் மும்முரமாக இறங்கிவிட்ட நிலையில் மீண்டும் நடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ’அடங்காதே’ படத்தில் முக்கிய ரோலில் நடிக்க சரத்குமார் ஒப்பந்தமாகியுள்ளார்.
Samayam Tamil i will act in the film sarathkumar
அரசியலில் இருந்து கொண்டே தொடர்ந்து நடிப்பேன்: சரத்குமாரின் அதிரடி


இந்நிலையில், பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்: நான் அரசியிலில் இருந்தாலும் கூட எனக்கு பிடித்தமான கதைகள் இருந்தால் அதை தேர்வு செய்து நடிக்கிறேன். வாழ்க்கையில் உயர்வு தாழ்வு என்பது எல்லோருக்கும் வரும். எனக்கும் வந்தது. சைக்கிளில் இருக்கும் இரு பெடல் மாதிரி. ஒன்று கீழே இருந்தால் மற்றொன்று மேலே இருக்கும். ஆனால், அதனை நான் தொடர்ந்து ஓட்டாமல் கீழே இறக்கிவிட்டே. இப்போது தான் எனக்கு புரிகிறது என்று கூறியுள்ளார்.

இப்போது, சண்முகம் முத்துச்சாமி இயக்கத்தில் ஜிவி பிரகாஷுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கிறேன். இதேபோல் கன்னடத்திலும், புனித்ராஜ்குமாருடன் இணைந்து ராஜகுமாரா என்ற படத்தில் நடித்துள்ளேன். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் விரைவில் திரைக்கு வரயிருக்கிறது. இன்னும் இரண்டு படங்களில் நடிப்பதற்கு கதை கேட்டுயிருக்கிறேன். இனி தொடர்ந்து படங்களில் நடிக்கயிருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

அடுத்த செய்தி