ஆப்நகரம்

‘’பயம்னா என்னான்னே எனக்கு தெரியாது; நானும், ஜெயலலிதாவும் பெண் சிங்கங்கள்,’’- சசிகலா அதிரடி

‘’சென்னை, பெங்களூரு சிறைகளை பார்த்தவள் நான்; ஜெயலலிதாவும், நானும் பெண் சிங்கங்கள்; நாங்கள் பயந்ததாகச் சரித்திரம் கிடையாது,’’ என சசிகலா அதிரடியாகப் பேசியுள்ளார்.

TOI Contributor 12 Feb 2017, 9:57 pm
‘’சென்னை, பெங்களூரு சிறைகளை பார்த்தவள் நான்; ஜெயலலிதாவும், நானும் பெண் சிங்கங்கள்; நாங்கள் பயந்ததாகச் சரித்திரம் கிடையாது,’’ என சசிகலா அதிரடியாகப் பேசியுள்ளார்.
Samayam Tamil i will be firm as i have been with amma vk sasikala
‘’பயம்னா என்னான்னே எனக்கு தெரியாது; நானும், ஜெயலலிதாவும் பெண் சிங்கங்கள்,’’- சசிகலா அதிரடி


கூவத்தூரில் தனியார் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை நேரில் சந்தித்து, அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி, அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவர் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் சிறப்பு உரை ஒன்றையும் நிகழ்த்தினார். அதில், ‘’நானும், ஜெயலலிதாவும் பெண் சிங்கங்கள். எப்போதுமே பயந்ததாகச் சரித்திரம் கிடையாது. எத்தனை எதிரிகள் வந்தாலும், கூண்டை கிழித்துக் கொண்டு சீறிப்பாயும் வித்தை கற்றவள் நான். யாருக்கும் அஞ்சப் போவதில்லை. பல பிரச்னைகளை சந்தித்து மீண்டுவந்துள்ளேன்,’’ எனக் குறிப்பிட்டார்.

மேலும் அவர் பேசியதாவது:

ஜெயலலிதாவின் மறு உருவம் நான். அவரின் ஆன்மா என்னோடு எப்போதும் இருக்கிறது. அது ஒவ்வொரு முறையும் என்னைப் பார்த்து, நல்லாட்சி நடத்தி, என் பெயரை காப்பாற்று எனக் கதறிக் கொண்டே இருக்கிறது. அந்த ஆன்மாவின் ஆசையை நான் நிறைவேற்றுவேன்.

நான் மற்றும் அம்மா ஜெயலலிதா இருவருமே எதற்கும் பயந்தவர்கள் அல்ல. நாங்கள் சென்னை சிறையையும் பார்த்திருக்கிறோம். பெங்களூரு சிறையையும் பார்த்திருக்கிறோம். பெண்தானே எனச் சிலர் மிரட்டிவருகின்றனர். அவர்களின் சலசலப்புக்கு நான் அஞ்ச மாட்டேன். இவற்றை நான் 30 ஆண்டுகளாகப் பார்த்து, சமாளித்து வருகிறேன்.

எத்தனை பேர் பிரச்னை கொடுத்தாலும், அவர்களை எளிதாக சமாளித்து, வீழ்த்திக் காட்டுவேன். அதற்கு, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எனக்கு ஆதரவு தரவேண்டும். உங்கள் ஆதரவு இருந்தால் போதும். மற்ற அனைத்து பிரச்னைகளையும் நான் மிகச் சாதாரணமாகக் கடந்து மேலே வந்துவிடுவேன். எளியவர்களின் கட்சி அதிமுக. அது என்றைக்கும் நிலைத்து நிற்கும்.

இவ்வாறு அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா அதிரடியாகப் பேசினார்.

அவரது பேச்சு, அங்கிருந்த கட்சியினர் மட்டுமின்றி, பத்திரிகையாளர்களையும் வியப்பில் ஆழ்த்தும் வகையில் அமைந்திருந்தது.

English Summary:
I will achieve everything if you all stand firmly behind me, I wont move away, I will be firm as I have been with 'Amma': #VKSasikala

அடுத்த செய்தி