ஆப்நகரம்

நான் ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து இது தான்: கமல்

நான் ஆட்சிக்கு வந்ததும் லோக்பால் சட்டத்தை மாற்றியமைப்பதே எனது முதல் கையெழுத்து என்று மக்கள் நீதிமய்யத்தின் தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 26 Aug 2018, 11:24 pm
நான் ஆட்சிக்கு வந்ததும் லோக்பால் சட்டத்தை மாற்றியமைப்பதே எனது முதல் கையெழுத்து என்று மக்கள் நீதிமய்யத்தின் தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil kamal d


சென்னை மைலாப்பூரில் மகளிர் சுய சக்தி என்ற பெயரில் விருதகள் வழங்கும விழா நடைபெற்றது. இதில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

‘மக்களின் மீது அதிக நம்பிக்கை கொண்டுள்ளதால் அரசியலுக்கு வந்துள்ளேன். அரசியலுக்கு அனைவரும் வர வேண்டும். குறைந்தபட்சம் ஐந்து வருடத்துக்கு ஒரு முறையாவது சாக்கடையை சுத்தம் செய்ய அரசியலுக்கு வர வேண்டும்.

தற்போது உள்ள லோக்பால் அரசியலில் நடக்கும் தவறுகளை கண்டிக்க போதுமானதமாக இல்லை. நான் ஆட்சிக்கு வந்ததும் லோக்பால் சட்டத்தை மாற்றி அமைப்பது தான் எனது முதல் கையெழுத்து. சுதந்திரம் பெற்று 72 ஆண்டுகள் கடந்தும் நாடு உரிய வளர்ச்சி பெறவில்லை’.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி