ஆப்நகரம்

அவைத் தலைவர் மாற்றமா? மதுசூதனன் விளக்கம்!

அதிமுக அவைத்தலைவர் மாற்றம் குறித்து வெளியான தகவல் தொடர்பாக அக்கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் விளக்கம் அளித்துள்ளார்

Samayam Tamil 6 Oct 2020, 2:58 pm
அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது தொடர்பாக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரி இடையே கடுமையான போட்டி நிலவும் சூழலில் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் அக்கட்சியின் செயற்குழுக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
Samayam Tamil மதுசூதனன்
மதுசூதனன்


கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்த கே.பி.முனுசாமி, அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை, முதல்வரும் துணை முதல்வரும் சேர்ந்து அக்டோபர் 7ஆம் தேதி அறிவிப்பார்கள் என்றார்.

இதனிடையே, அதிமுக அவைத்தலைவராக உள்ள மதுசூதனுக்கு உடல்நிலை குறைவு காரணமாக அவைத்தலைவர் மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகின. இந்த நிலையில், அதற்கு விளக்கமளித்துள்ள மதுசூதனன், அதிமுக அவைத்தலைவராக நான்தான் நீடிப்பேன். இதில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

எடப்பாடியின் விவசாயி ஃபார்முலா: கை கொடுக்குமா, கை நழுவுமா?

அவைத்தலைவர் பதவி ஜெயலலிதா தனக்கு கொடுத்தது என்று தெரிவித்த மதுசூதனன், நான் சாகும் வரை அவைத்தலைவர் பதவியில் தொடர்வேன் என்றும் தெரிவித்ததுடன், அவைத்தலைவர் மாற்றப்படுவதாக வெளியான செய்தி தவறு என்றும் விளக்கம் அளித்துள்ளார். மேலும், ஓ.பி.எஸ். எந்த நோக்கத்திற்காக தர்மயுத்தம் செய்தாரோ அதை நிறைவேற்றுவார் என்றும் அப்போது அவைத்தலைவர் மதுசூதனன் தெரிவித்தார்.

முன்னதாக, சசிகலாவை தீவிரமாக ஆதரித்து வந்த அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்கிய காலத்தில் அவருடன் கை கோர்த்து அவருக்கு ஆதரவாக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி