ஆப்நகரம்

எனது குடும்பத்தை பெரிது படுத்திக் கொள்வேன்: கமல்ஹாசன் பேச்சு

இளைஞர்களே என்னுடைய குடும்பம். அவர்களே நாளைய தலைவர்கள் என நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்

Samayam Tamil 1 Oct 2019, 1:09 pm
சென்னை: நான் எனது குடும்பத்தை பெரிது படுத்திக் கொள்வேன் என மாணவர்களிடையே பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil கமல்ஹாசன்
கமல்ஹாசன்


சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசுகையில், குடும்ப அரசியல் தான் தமிழகத்தில் செய்ய முடியும் என்றால் நான் எனது குடும்பத்தை பெரிது படுத்திக் கொள்வேன். இளைஞர்களே என்னுடைய குடும்பம். அவர்களே நாளைய தலைவர்கள் என குறிப்பிட்டார்.

தமிழகத்தில் இளைஞர்களின் வேலை இழப்பை சரிசெய்ய வேண்டுமென்றால், கல்வி முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என குறிப்பிட்ட கமல், மொழி ஒரு தொடர்பியல் கருவிதான். அதனை வைத்து அரசியல் செய்யக் கூடாது என்றார்.

சமூக பிரக்ஞை உள்ளவர்களாக மாணவர்களை மாற்றும் வல்லமை கொண்ட ஒன்றாக ஊடகம் மாறி விட்டது. அந்த சாட்டையை மாணவர்கள் கையில் எடுத்து சுழற்ற வேண்டிய காலம் வந்து விட்டது தெரிவித்த அவர், மாணவர்கள் அரசியலை பார்த்து ஒதுங்கி நிற்க கூடாது எனவும் வலியுறுத்தினார்.

கேள்விகள் மூலமே எனக்கு கல்வி கிடைக்கிறது. படிப்பை பாதியில் நிறுத்தியதால், இனி நான் சாகும்வரை மாணவன். அரசு இல்லாமல் கல்வியும், விவசாயமும் முன்னேற முடியாது இதை அரசு உணர்ந்து செயல்பட்டால் சமூகம் செல்லவேண்டிய இடத்தை அது விரைவில் சென்றடைய முடியும் எனவும் நிகழ்ச்சியில் பேசிய கமல் தெரிவித்தார்.

அடுத்த செய்தி