ஆப்நகரம்

“அரசியல் களத்திற்கு வந்து ஜெயலலிதாவின் பெயரை காப்பாற்றுவேன்” : தீபா அதிரடி

“அரசியல் களத்திற்கு வந்து ஜெயலலிதாவின் பெயரை காப்பாற்றுவேன்” : தீபா அதிரடி

TOI Contributor 20 Dec 2016, 9:16 am
ஜெயலலிதாவின் பெயரை காப்பாற்ற அரசியல் களத்திற்கு வருவேன் என்று அவரது அண்ணன் மகள் தீபா கூறி இருக்கிறார்.
Samayam Tamil i will enter politics and follow jayalalithas path says deepa
“அரசியல் களத்திற்கு வந்து ஜெயலலிதாவின் பெயரை காப்பாற்றுவேன்” : தீபா அதிரடி


தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த தீபா பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். ஜெயலலிதாவுடனான உறவு குறித்தும், சசிகலா குடும்பத்தின் தலையீடு குறித்தும் பேசிய அவர், தங்கள் குடும்பம் போயஸ் தோட்டத்தில் இருந்து எப்படி வெளியேற்றப்பட்டது என்று கூறினார்.

மேலும் ஜெயலலிதா உயிருடன் இருந்த போதே அரசியலில் சேர விரும்பியதாக கூறும் தீபா, அதிமுக உறுப்பினராக கூட சேர முடியவில்லை என்றார். ஜெயலலிதா சிறைக்கு சென்ற போது கூட பலரும் தீபாவை அரசியலுக்கு வர வலுயுறுத்தியுள்ளனர். கட்சிக்காக ஜெயலலிதா பல தியாகங்களை செய்துள்ளார். பல போராட்டங்களை சந்தித்து அதிமுகவை கட்டமைத்தார். அதை காக்க வேண்டும் என்ற நிலை வரும் பட்சத்தில் அரசியல் களத்திற்கு வந்து ஜெயலலிதா பாதையில் அவரது பெயர் மற்றும் புகழை காப்பாற்றுவேன் என்று தீபா அதிரடியாக தெரிவித்துள்ளார்.

I Will Enter Politics and Follow Jayalalitha’s Path Says Deepa

அடுத்த செய்தி