ஆப்நகரம்

"ஓ.பி.எஸ் உடன் இணைந்து பணியாற்றுவது குறித்து பின்னர் அறிவிப்பேன்" - ஜெ.தீபா பேட்டி..!

ஓ.பன்னீர் செல்வம் உடன் இணைந்து பணியாற்றுவது குறித்து பின்னர் அறிவிப்பேன் என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.

TNN 8 Feb 2017, 4:37 pm
ஓ.பன்னீர் செல்வம் உடன் இணைந்து பணியாற்றுவது குறித்து பின்னர் அறிவிப்பேன் என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.
Samayam Tamil i will inform to work with ops soonsays j deepa
"ஓ.பி.எஸ் உடன் இணைந்து பணியாற்றுவது குறித்து பின்னர் அறிவிப்பேன்" - ஜெ.தீபா பேட்டி..!


அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா நடராஜனுக்கு எதிராக தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்,நேற்று திடீர் போர்க்கொடி உயர்த்தினார்.தன்னை வற்புறுத்தி ராஜினாமா கடிதத்தில் கையெழுத்து வாங்கியதாகவும்,கட்சியை தனி ஆளாக போராடி காப்பாற்ற தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.இதனைத் தொடர்ந்து சசிகலா அணி,பன்னீர் செல்வம் அணி என இரண்டு அணிகள் அதிமுகவில் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த ஓ.பி.எஸ்,ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபாவுடன் இணைந்து பணியாற்றவும் தயார் எனவும் அவருக்கு அழைப்பு விடுக்க இருப்பதாகவும் கூறினார்.

இந்நிலையில் இன்று மாலை தி.நகரில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஜெ.தீபா.”தற்போதைய சூழலில் நான் ஏதும் கூற முடியாது.எனது நிலையை விரைவில் அறிவிப்பேன்.முதல்வரை சந்திப்பது குறித்து இனிதான் முடிவு செய்ய வேண்டும். பன்னீர் செல்வத்துடம் இணைந்து பணியாற்றுவது குறித்து விரைவில் தெரிவிப்பேன்.என்னை குறித்து வெளியாகும் யூகங்களை யாரும் நம்ப வேண்டாம்.”என கூறினார்.

இந்நிலையில் சேலத்தைச் சேர்ந்த ஜெ.தீபா ஆதரவாளர்கள்,ஓ.பன்னீர் செல்வத்திற்கு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.

I will inform to work with OPS soon,says J.Deepa

அடுத்த செய்தி