ஆப்நகரம்

வாக்குக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்க மாட்டேன் - கமல்ஹாசன்

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சக்திவேலை ஆதரித்து தலைவர் கமலஹாசன் பிரச்சாரம் செய்தார். ஒரு ரூபாய் கூட வாக்குக்கு பணம் கொடுக்க மாட்டேன் என்றும் ஒரு ரூபாய் கூட வரி பணத்தை எடுக்க மாட்டேன் என்று கூறி வாக்கு சேகரித்தார்.

Samayam Tamil 5 May 2019, 8:28 pm
திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சக்திவேலை ஆதரித்து தலைவர் கமலஹாசன் பிரச்சாரம் செய்தார். ஒரு ரூபாய் கூட வாக்குக்கு பணம் கொடுக்க மாட்டேன் என்றும் ஒரு ரூபாய் கூட வரி பணத்தை எடுக்க மாட்டேன் என்று கூறி வாக்கு சேகரித்தார்.
Samayam Tamil Kamal Haasan


முன்னதாக பணப்பட்டுவடவை தடுக்க தேர்தல் அதிகாரிகள் ஆர்வம் காட்ட வேண்டும். அப்படி இல்லையெனில், துணை ராணுவம் குவிக்கப்படுவது உள்ளிட்டவற்றுக்கு அர்த்தம் இருக்காது என்று தனது கருத்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார்.

அடிப்படை உள்கட்டமைப்பு திட்டங்களை அதிமுக அரசு தவிர்த்ததால், மாநிலத்தில் தொழில்துறை வளர்ச்சி பாதிக்கப்பாட்டுள்ளது என்று சுட்டிக்காட்டிய அவர், 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட 45 திட்டங்களில் சுமார் 35 திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தவில்லை என்று குற்றம் சாட்டினார்.

இந்நிலையில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சக்திவேலை ஆதரித்து தலைவர் கமலஹாசன் பிரச்சாரம் செய்தார்.

விளாச்சேரியில் பேசிய அவர் திருப்பரங்குன்றம் பகுதியில் குழாய்கள் அமைத்து குடிநீர் வசதி செய்து தரப்படும் என்றும், சுத்தம் செய்யப்படாமல் உள்ள சாக்கடைகள் சுத்தம் செய்யப்படும் என்றும் கூறினார்.

மேலும் ஒரு ரூபாய் கூட வாக்குக்கு பணம் கொடுக்க மாட்டேன் என்றும் ஒரு ரூபாய் கூட வரி பணத்தை எடுக்க மாட்டேன் என்று கூறி வாக்கு சேகரித்தார்.

அடுத்த செய்தி