ஆப்நகரம்

பேனர் வைத்தால் சொந்த செலவில் அகற்றுவேன்: புதுச்சேரி முதல்வர்

தன்னுடைய பிறந்தநாளுக்கு பேனர் வைத்தால், தனது சொந்த செலவில் அகற்றவேன் என்று புதுச்சேரி முதல்வர் நாரயணசாமி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 27 May 2018, 1:19 pm
தன்னுடைய பிறந்தநாளுக்கு பேனர் வைத்தால், தனது சொந்த செலவில் அகற்றவேன் என்று புதுச்சேரி முதல்வர் நாரயணசாமி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil Narayanasamy


புதுச்சேரியில் முதல்வர் நாரயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு சுற்றுச்சுழலுக்கு கேடு விளைவிக்கும் பேனர்கள் தடை அமைக்க வரைமுறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தன்னுடைய பிறந்தநாளுக்கு பேனர் வைத்தால், தனது சொந்த செலவில் அகற்றவேன் என்று முதல்வர் நாரயணசாமி தெரிவித்துள்ளார். வரும் 30ம் தேதி நாராயணசாமியின் பிறந்தநாள் வருகிறது. இதனையடுத்து, தனது பிறந்தநாளுக்கு கட்சியினர் யாரும் பேனர் வைக்கக்கூடாது என்றும் மீறி பேனர் பேனர் வைக்கும் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், அவ்வாறு பேனர்கள் வைக்கப்பட்டால் தனது சொந்த செலவில் அகற்றுவதாகவும் தெரிவித்தார்.

அடுத்த செய்தி