ஆப்நகரம்

“ரகசிய தகவல்களை வெளியிட நேரிடும்” : சசிகலாவுக்கு ஓபிஎஸ் எச்சரிக்கை!

“ரகசிய தகவல்களை வெளியிட நேரிடும்” : சசிகலாவுக்கு ஓபிஎஸ் எச்சரிக்கை!

TOI Contributor 9 Feb 2017, 3:54 pm
என் மீது தொடர்ந்து பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தும் பட்சத்தில், சில ரகசியங்களை வெளியிட நேரிடும் என்று முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், சசிகலாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Samayam Tamil i will reveal some important things says o panneer selvam to sasikala
“ரகசிய தகவல்களை வெளியிட நேரிடும்” : சசிகலாவுக்கு ஓபிஎஸ் எச்சரிக்கை!


அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் இன்று ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்து அவருடன் இணைந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பன்னீர் செல்வம், அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்றிருக்க வேண்டியவர் மதுசூதனன். ஆனால் நாடகமாடி சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்று உள்ளார். ஆட்சி, கட்சி பொறுப்பு வேண்டாம் என்று சொல்லி போயஸ் கார்டன் உள்ளே நுழைந்த சசிகலா இன்று முதலமைச்சர் ஆகியே தீருவேன் என்கிறார். அதுமட்டுமில்லாமல் என்னை துரோகி என்றும் குற்றம் சாட்டி வருகிறார். இப்படி தொடர்ந்து பொய்யான குற்றச்சாட்டுகளை சசிகலா சுமத்தி வரும் பட்சத்தில் யாருக்கும் தெரியாத சில தகவல்களை வெளியிட நேரிடும் என்று ஓ.பன்னீர் செல்வம் கூறியிருக்கிறார்.

அடுத்த செய்தி