ஆப்நகரம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழகத்திற்காக போராடுவேன்; தமிழிசை!

தமிழகத்திற்காக போராடுவேன் என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 1 Apr 2018, 9:26 pm
சென்னை: தமிழகத்திற்காக போராடுவேன் என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
Samayam Tamil Tamilisai
தமிழிசை சவுந்திரராஜன்


நான்கு மாநிலங்களுக்கு இடையே காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில், மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

அதற்கான காலக்கெடு முடிந்தும், மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

சாலை மறியல், கடையடைப்பு என எதிர்க்கட்சிகள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.

இந்நிலையில் ஜோலார்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மூன்று மாநிலங்கள் இடையே 13 முறை பேச்சுவார்த்தை நடந்துள்ளன.

எந்தவொரு முடிவும் எட்டப்படவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் தமிழகத்திற்காக நானும் பாடுபடுவேன்.

ஸ்டெர்லைட் விவகாரத்தில் மத்திய அரசு உரிய நேரத்தில் முடிவு எடுக்கும்.

I will struggle for Cauvery Issue says Tamilisai.

அடுத்த செய்தி