ஆப்நகரம்

முன்னாள் தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் ஓபிஎஸ் உடன் சந்திப்பு!

முதல்வர் பன்னீர்செல்வத்தின் வீட்டிற்கு, மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஞானதேசிகன் நேரில் வந்தார்.

TOI Contributor 10 Feb 2017, 10:11 am
முதல்வர் பன்னீர்செல்வத்தின் வீட்டிற்கு, ஐஏஎஸ் அதிகாரி ஞானதேசிகன் நேரில் வந்தார்.
Samayam Tamil ias officer gnanadesikan comes to ops home
முன்னாள் தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் ஓபிஎஸ் உடன் சந்திப்பு!


அதிமுக.,வில் ஏற்பட்டுள்ள விரிசல் காரணமாக, பன்னீர்செல்வம் அணி, சசிகலா அணி என பிரிவு நிகழ்ந்துள்ளது. இதையடுத்து, பன்னீர்செல்வம் தனது தரப்பு ஆதரவை வலுப்படுத்தத் தொடங்கியுள்ளார். இதன் ஒருபகுதியாக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் பதவிநீக்கம் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி ஞானதேசிகன் உள்ளிட்ட சிலர் மீண்டும் பதவி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதில், ஞானதேசிகன் தமிழக தலைமைச் செயலாளராக இருந்தவர் ஆவார். அவரை தற்போது சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அண்ணா மேலாண் கல்வி நிறுவன இயக்குனராக முதல்வர் பன்னீர்செல்வம் நியமித்துள்ளார்.

இந்நிலையில், பதவியை ஏற்றுக்கொண்ட ஞானதேசிகன் இன்று மரியாதை நிமித்தமாக, முதல்வர் பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்துப் பேசினார். ஒருவேளை, பன்னீர்செல்வத்திற்கு, அவரும் ஆதரவு தெரிவித்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

IAS officer Gnanadesikan comes to OPS home.

அடுத்த செய்தி