ஆப்நகரம்

அரசு பள்ளியில் தனது மகளை சேர்ந்த பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி - அரசு பள்ளி தரமாக இருப்பதாக பெருமிதம்

சென்னை மாநகராட்சியில் வருவாய் மற்றும் நிதித்துறை துணை ஆணையராக பணியாற்றி வருபவர் ஐஏஎஸ் அதிகாரி லலிதா. இவர் தனது மகளை மாநகராட்சி பள்ளியில் சேர்த்து அனைவருக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறார்.

TNN 18 Jul 2017, 9:01 am
சென்னை : சென்னை மாநகராட்சியில் வருவாய் மற்றும் நிதித்துறை துணை ஆணையராக பணியாற்றி வருபவர் ஐஏஎஸ் அதிகாரி லலிதா. இவர் தனது மகளை மாநகராட்சி பள்ளியில் சேர்த்து அனைவருக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறார்.
Samayam Tamil ias officer take her daughter to corporation school
அரசு பள்ளியில் தனது மகளை சேர்ந்த பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி - அரசு பள்ளி தரமாக இருப்பதாக பெருமிதம்


அரசு பள்ளியில் தரம் இல்லை என கூறி அரசு பணியில் இருப்பவர்களோ, தனியாரில் கூடுதல் சம்பளம் வாங்குபவர்கள், தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க நினைப்பது சாதாரணமாகிவிட்டது.

ஏன் அரசு ஊழியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்கக் கூடாது? என அண்மையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என். கிருபாகரன் கேள்வி எழுப்பியிருந்தார். அரசு ஊழியர்கள், குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க முயற்சிக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

இந்நிலையில் பெண் ஐஏஎஸ் அதிகாரி லலிதா தனது மகள் தருணிகாவை சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள புலியூர் மாநகராட்சி தொடக்க பள்ளியில் எல்.கே.ஜி வகுப்பில் சேர்த்துள்ளார்.

தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளும் தற்போது தரமாகவே செயல்பட்டு வருகின்றன. எனவே தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக லலிதா குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி